அது ஒரு பாழடைந்த பங்களா…
‘ஆ’…என்று ஒரு அலறல் சத்தம் கேட்டது…
இதயம் ‘லப்… டப்… லப்… டப்’ என்று படபடத்தது…
ஈஸி சேர் ஒன்று தானாக காற்றில் அசைந்தது…
உள்ளுணர்வு ஏதோ சொல்லியது…
ஊளையிடும் சத்தம் தூரத்தில் கேட்டது. ஓநாய்களாக இருக்குமோ?
என்னை ஒரு அமானுஷ்ய உருவம் பின் தொடர்ந்தது. நான் பயத்தில் நடுங்கினேன்.
ஏன் என்னை பார்த்து பயப்படுகிறாய்? பல ஆண்டுகளுக்கு முன் நான்தான் உன்…
‘ஐயோ’ என்று அலறியபடியே தடுமாறி விழுந்தேன்.
ஒரு உருவம் “கடைசி பெஞ்சுல எவன்டா அவன் ஸ்கூல்லயே தூங்கறது?” என்று கத்தியது.
‘ஓ… கனவா…? அதானே… நாங்க எல்லாம் நிஜத்துல சிங்கம்ல?’ என்று இல்லாத மீசையைத் தடவினேன். ‘டஸ்டர்’ பறந்து வந்தது.
‘ஔவ்வ்வ்… என்று வடிவேலு மாதிரி அழுதுகொண்டே தலையைத் தடவியபடி பக்கத்து பெஞ்ச் நண்பனிடம் சொன்னேன்.
அ’ஃ‘து கடைசிவரை என்ன சொல்ல வந்தது என்றே தெரியலடா…”
நீங்க எப்பயாவது அந்த பங்களா பக்கம் போனா, அது என்னன்னு கேட்டு சொல்லுங்க…
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #song #poem #comedy #horror #dhigil aatthichudi
only last benchers can be like this