சிறுகதைகள் மூலமாகவும் க்ரைம் கதைகளை வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்று இந்தக் கதையின் வழியே நிரூபித்துள்ளார் எழுத்தாளர் ர.சிவக்குமார். நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறிய தேவா மற்றும் சுபா என்ற இரண்டு கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதை க்ரைம் கதையாகும். பிறந்தநாள் பரிசாக தேவா கொடுத்த கிஃப்டே சுபாவின் மரணத்திற்கு காரணமாகி, கொலையாளியை நெருங்கவும் காரணமாக இருக்கும். சுபா இறந்த பிறகு கதையில் வேகம் கூடி குற்றவாளியைப் பிடித்த தேவாவின் அண்ணன் சிஐடி அசோக், கொலையாளி கொலை செய்த முறையை அறிந்தபோதும், கொலைக்கான காரணத்தை அறிந்தபோதும் சற்று அதிர்ந்துதான் போனான்.
இந்தப் புத்தகம் கீழடி பதிப்பகத்தின் வெளியீடு. இதை நீங்கள் Google Play Books-ல் இலவசமாக வாசிக்கலாம்.
கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து இலவசமாக வாசித்து வியப்புறுங்கள்..!
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #keeladi pathippagam #crime thriller #detective #kaatru adaitha paiyada #ra.sivakumar
Leave a Reply