அந்த அதிகாலைக் குளிரையும் தாண்டி விவேக் யமஹாவில் வேகமாகப் பறந்துகொண்டிருந்தான். நீலேஷ் மற்றும் ரோஸி இருவரும் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஸ்தலத்திற்கு வந்த விவேக்கிற்கு கிடைத்தது கேஸின் முதல் தடயம். இந்தக் கேஸை விவேக் விசாரித்துக்கொண்டிருக்கும் போதே செந்தாமரைக்கண்ணன், கார்மேகம், பச்சையப்பன் என்ற மூவருக்கும் கொலைமிரட்டல் வருகிறது. நடந்த கொலை மற்றும் கொலை மிரட்டலிலிருந்து விவேக்கிற்கு கேஸில் ஒரு துப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் போதே பிரசாந்த் என்பவன் சம்பந்தமே இல்லாமல் கொலை செய்யப்படுகிறான். அடுத்ததாக எக்ஸ் மினிஸ்டர் வெள்ளைச்சாமியும் கொலை செய்யப்பட கேஸ் திக்கு தெரியாத பாதையில் பயணிப்பதை விவேக் உணர்ந்தான். இதற்கிடையில் கொலையாளி போனில் சவால் விடுக்கிறான்.
அடுத்த கொலை நிகழும் முன்பு குற்றவாளி பிடிபட்டானா? கொலைக்கான மோட்டிவ் என்ன? ஸ்பாட்டில் விவேக் கண்டெடுத்த தடயம் என்ன?
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #panjavarna kolaigal
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=680
CAN YOU SEND ME THIS NOVAL PDF?