பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்துவந்த ரூபனும் வானதியும் ‘மரணம் பார்க்காத வீடு’ பற்றி கேள்விப்பட்ட உடனே பேட்டி எடுக்க திண்டலில் இருந்த அந்த கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அந்த நிமிடம் மரணம் பார்க்காத வீடு அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. சாகும் நிலையில் உள்ள ஒருவர் அந்த வீட்டில் இருக்கும் வரையில் அவரது உயிர் உடலை விட்டு வெளியே போகாது. மேலும் அந்த வீட்டில் உள்ள மாமரம் மற்றும் தென்னை மரத்தில் வருடத்திற்கு ஒரே ஒரு காய் மட்டுமே பூக்கும். மீதி அப்படியே உதிர்ந்துவிடும். இந்நிலையில் ரூபனுக்கு அவனது பத்திரிக்கை எடிட்டர் இளவேனிலிடம் இருந்து ஒரு அதிர்ச்சித் தகவல் தெரிய வருகிறது. அதேசமயம் ஜன்னலில் தாடி வைத்த ஒரு உருவம் வந்து ரூபனைத் திடுக்கிடச் செய்கிறது.
மரணம் பார்க்காத வீட்டின் பின்னணி என்ன? தெய்வாம்சம் பொருந்தியதாகக் கருதப்படும் மரங்கள் பூக்காததற்கான காரணம் என்ன? நடப்பதற்கெல்லாம் என்ன காரணம்? விரிவாகத் தெரிந்துகொள்ள இன்றே வாங்கிப் படியுங்கள் “உயிர் உருகும் சத்தம்”.
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #uyir urugum sattham
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=56
Leave a Reply