க்ரைம் பிரான்ச் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுவதற்காக ரூபலாவுடன் பம்பாய் வந்த விவேக்குடன் ஒரு வழக்கும் தொடர்ந்து வந்துவிட்டது. கடுப்பான ரூபலாவைப் பொருட்படுத்தாமல் உயரதிகாரியை சந்திக்க சென்றான் விவேக். அடுத்த நாள் கிளம்பவிருக்கும் முதல் பாரீஸ் ஃப்ளைட்டுக்கு ஆபத்து என்று தகவல் சொல்லியது அந்த அறையில் இருந்த அனைத்து கம்ப்யூட்டர்களும். அந்த விமானத்தில் பறக்க இருந்த பிரபலமான நடிகர் சசிதரனுக்கும் நடிகை நட்சத்திராவுக்கும் விடப்பட்ட மிரட்டல் என்றெண்ணிய விவேக் அவர்களிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டு, உடனே ஒரு வியூகத்தை வகுத்தான். விமானத்தின் உட்பகுதியிலோ அல்லது வெளிப்பகுதியிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முடிவான பிறகு எப்படியோ விமானம் பறக்கத் தொடங்கியது. விமானத்தின் முடிவு..?
விவேக்குடன் பறக்கத் தயாராகுங்கள் பாரீஸின் ஃபர்ஸ்ட் ப்ளைட்டில்..!
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #first_flight_to_paris
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=30
Drop your Thoughts