கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்த சொத்துக்களை தன்னுடைய இஷ்டப்படி பெற்றோர்கள் சிறிதும் நல்வழியில் செலவிட சம்மதிக்காததால் ஒரு கடத்தல் நாடகத் திட்டம் போடுகிறாள் பாடகி சுரபி. ரத்ததானம் செய்யப்போவதாகச் சொல்லி ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்து கிளம்பிய சுரபி, காதலன் ஹேமந்த் மற்றும் அவன் நண்பன் சையத்துடன் சேர்த்து கடத்தல் நாடகத்தைத் தொடங்க இருந்த நேரத்தில், நிஜ கடத்தல்காரர்களிடம் மாட்டிக்கொள்ள விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. கடத்தல்காரர்கள் நிர்பந்தித்த தொகையை எடுத்துச் சென்ற சுரபியின் தந்தை கொல்லப்படுகிறார். அதேபோல் அவளுடைய தாயும் கொல்லப்படுகிறாள். மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த சுரபியும் ஹேமந்த்தும் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்தனரா? என்பதே ரெடிமேட் சொர்க்கம்.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #readymade_sorkkam
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=719
Leave a Reply