எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாக வந்துவிட வேண்டும் என்பது கணேசனின் அவா. மனோகரி ஒரு கம்பெனியில் டைபிஸ்ட்டாக வேலை செய்பவள். இருவரும் காதலர்கள். பணம் பத்தும் செய்யும் என்பது இவர்கள் இருவருக்கும் சரியாகப் பொருந்தும். சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற கணேசனுக்கு ஒரு பிரபல நடிகையைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க, மனோகரிக்கு அவள் முதலாளியைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பது போலவே நடித்து தங்கள் கனவு நிறைவேற வேறுவேறு திட்டங்கள் போட, கடைசியில் விதி வேறுவிதமாக வேலை செய்கிறது. அதில் கணேசன் இறக்க, மனோகரி என்னவானாள் என்பதே இருட்டுக்கு இரண்டு நிறம்.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=586
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #iruttukku_irandu_niram
Leave a Reply