ஒரு ரகசிய ப்ராஜெக்ட்டை, தன்னுடைய பர்சனல் அசிஸ்டெண்ட் ராஜூக்கு கூட தெரிவிக்காமல், பரம ரகசியமாக செய்து கொண்டிருந்தார் ப்ரொபசர் மெஹ்ரா. மெஹ்ராவின் இளம் மனைவி ரெஜிதாவை மட்டும் ஒருமுறை ப்ராஜெக்ட் அறைக்கு அழைத்துச் செல்கிறார். யாருமே அறிந்திராத அந்த ரகசிய ப்ராஜெக்ட் – மனித உணர்வுள்ள ரோபோ “ஸ்ரீ”. ரெஜிதாவைத் தவறாகப் பார்த்து அவளை அடைய நினைக்கிறது அந்த ஸ்ரீ. இந்நிலையில் ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருக்க, அதன் தகவல்களைத் திருடித் தருமாறு ராஜின் காதலியைக் கடத்தி, ராஜை மிரட்டுகிறது ஒரு கும்பல். ஸ்ரீ-யிடம் இருந்து ரெஜிதா தப்பித்தாளா..? காதலியை மீட்க ராஜ் செய்தது என்ன..? ப்ரொபசர் மெஹ்ரா ப்ராஜெக்ட்டை முடித்தாரா..? பரபரப்பான நிமிடங்களுடன் ஒரு ரோபோவிற்கு உணர்ச்சி வந்தால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பயங்கர கற்பனைகளுடன் எழுதியிருப்பார் ராஜேஷ்குமார்.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1242
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #11_mani_59_nimisham_59_vinadigal
Leave a Reply