DAY02 | ரெட் ரோஸ் கெஸ்ட் ஹவுஸ்.!!

முதலமைச்சர் சத்தியவதியின் மகளும் மருமகனும் கடத்தப்பட்ட வீடியோ கேசட்டைப் பார்த்து திடுக்கிட்டான் விவேக். இடம் முதலமைச்சரின் வீடு. ‘நாளைய பாரதம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்களைக் கடத்திப் பிணையாக வைத்துக்கொண்டு சில கோரிக்கைகளை முதலமைச்சரின் முன் வைக்கிறார்கள்.

ரெட்ரோஸ் கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றிருந்த முதலமைச்சர் மகளும் மருமகனும், 6 காவலாளிகளும் கடத்தப்பட்டிருந்தனர். முதலில் அந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து விசாரணையை ஆரம்பிக்க நினைக்கிறான் விவேக். அதற்கு முன்னரே கெஸ்ட் ஹவுஸில் விபரீதம் ஆரம்பித்திருந்தது.

அதே வேளையில் பணக்காரர்களைக் குறிவைத்து, அவர்கள் செய்யும் தவறுகளைப் போட்டோ பிடித்து வைத்துக் கொண்டு, மிரட்டி அவர்களிடம் பணம் பறித்து வருகிறாள் பத்திரிக்கை ஆசிரியை பிரபா. இந்நிலையில் பிரபாவை சந்திக்க பாற்கடல்வாசன் என்ற பெயரில் வாசகனாக வருகிறான் ஒருவன்.

பிரபாவின் மோசமான கடந்த கால வாழ்க்கைப் பற்றி புட்டுப்புட்டு வைக்கிறான் அவன். கலக்கமடைந்த பிரபா அவனைக் கொலை செய்வதற்காக பாதாள அறையில் அடைத்து வைக்கிறாள். ஜட்ஜின் மகளை வைத்து இந்த முறை பணம் பறிக்கத் திட்டம் போடுகிறாள் பிரபா.

பணம் வாங்கச் சென்ற சாலமன் இரவு வெகுநேரத்துக்குப் பிறகு போன் செய்து சிக்கலில் மாட்டிகொண்டதாக ஒரு பொய்யைச் சொல்லி அவளை உதவிக்கு அழைக்கிறான். அவனைக் காப்பாற்றச் சென்ற பிரபா பிறகு திரும்பி வரவே இல்லை.

நாம் கெஸ்ட் ஹவுஸிற்கு வருவோம்..

கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் குந்தனிடம் தன்னுடைய விசாரணையை ஆரம்பித்த விவேக், சிறிது நேரத்திலேயே அவன் போய் சொல்வதை அறிகிறான். வீட்டைச் சுற்றி தடயம் தேடிக்கொண்டிருந்த விவேக்-கோகுல்நாத்தின் கண்களில் சிக்குகிறது மூடப்பட்டிருந்த பழைய தண்ணீர் தொட்டி.

தண்ணீர்த் தொட்டிக்குள் சாரை சாரையாக எறும்புகள் எதையோ எடுத்துச் செல்வதைப் பார்க்கிறான் விவேக். அவை எல்லாம் சதைத் துணுக்குகள் என்பதைக் கண்டுபிடித்த விவேக், குந்தனிடம் தொட்டியை உடைக்க சொல்கிறான். ஆனால், கடப்பாரையை எடுக்கக் கீழே சென்ற குந்தன் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை.

இதற்கிடையே திடீரென தூரத்தில் யாரோ எதையோ எரிக்க, உஷாரான விவேக் அங்கு சென்று பார்த்ததும் திடுக்கிட்டான். குந்தன் வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அவன் கைகள் கட்டப்பட்டு யாரோ அவனை எரித்திருந்தனர். எதையோ சொல்ல வாயெடுத்த குந்தன் முடியாமல் இறக்கிறான்.

காட்டிற்குள்ளே கொஞ்ச தூரம் சென்ற விவேக்கை ஒருவன் துப்பாக்கி முனையில் மிரட்டி புதைகுழிக்குள் தள்ளிவிடப் பார்க்கிறான். இங்கே கோகுல்நாத் போலீசாரின் உதவியுடன் தொட்டியை உடைக்க உள்ளே எலும்புக்கூடு கிடைக்கிறது.

தொட்டியில் கிடைத்த எலும்புக்கூடு ஒருபுறம் இருக்க, நீண்ட நேரமாகியும் விவேக்கைக் காணாததால் கோகுல்நாத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #red_rose_guest_house

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=31

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading