இந்திய ராணுவத்திற்காக 90 நாட்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு உருவாக்கபட்ட 156 தலைசிறந்த வீரர்களை கவுரவிக்க நடந்து கொண்டிருந்த விழாவில் திடீரென வெடித்தது வெடிகுண்டு. அதில் 57 வீரர்கள் இறக்க, அரங்கில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயமே ஃபாரன்சிக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி சமூக ஆர்வலர் சத்யஸ்வரூப் பட்டாச்சார்யா அரசாங்கத்திற்கு எதிராக உண்மையான குற்றவாளியைக் கைது செய்ய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின்போது அந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இரண்டு மந்திரிகள் தான் காரணகர்த்தா எனவும் அவர் அறிவித்தார். பேசிக்கொண்டிருந்த பட்டச்சார்யா திடீரென கூட்டத்திலேயே மயங்கி விழுந்தார். வெடிகுண்டு வெடிக்கவில்லை என்றால் வெடித்தது என்ன பொருள்? நாட்டிற்கு எதிராக செயல்பட்ட அந்த மந்திரிகள் யார்? அந்நிய சக்திகளின் எண்ணத்தை ஈடேற்றியதன் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்புடன் பல சுவாரஸ்யத் தகவல்களுடனும் கூறுவதே “மீண்டும் விவேக்கின் விஸ்வரூபம்”.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #meendum_vivekkin_viswaroopam
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=57
Leave a Reply