அன்றைக்கும் ஒருவன் தன்னை பைக்கில் பின் தொடர்வதை அறிந்த லேகா கடுப்பானாள். இப்படி தினமும் கல்லூரி செல்லும்போதும், தோழிகளுடன் வெளியில் செல்லும்போதும் சிலர் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை சில நாட்களாகவே அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இதனாலேயே லேகா அவளுடைய அப்பா ராமகிருஷ்ணனை வெறுத்தாள். காரணம், லேகாவைக் கண்காணிக்க அவள் அப்பா அவளுக்கு பாடிகார்ட்ஸ் போட்டது தான். கோடீஸ்வரரான ராமகிருஷ்ணனின் ஒரே மகள் லேகா. சிறுவயதிலேயே தாயை இழந்த லேகாவிற்கு மிகவும் அரிதான நோய் இருந்ததால்,... Continue Reading →
மிஸ். ப்ரீதி, 545, பீச் ரோடு, மும்பை – Crime Novel
கலெக்டர் வகுளாபரணன் முக்கியமான மீட்டிங்கை அட்டென்ட் செய்வதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு முக்கியமான தகவலோடு ப்ரீதி என்ற ரிப்போர்ட்டர் பெண் கலெக்டரை சந்திக்க வருகிறாள். நீண்டகாலமாக கலெக்டர் தேடிக்கொண்டிருக்கும் ஸ்மக்ளர் சத்ரபதியைப் பற்றித் துப்பு கொடுக்க வந்திருப்பதாகச் சொல்லி கலெக்டரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறாள். அனுமதி கிடைத்ததும் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறாள் ப்ரீதி. ஸ்மக்ளர் சத்ரபதியின் மகள் தான் ப்ரீதி என்பதே பிறகு தான் கலெக்டருக்கே தெரியவருகிறது. கலெக்டர் வகுளாபரணனின் பெண் மதுமிதாவைக் கடத்தி வைத்துக்கொண்டு ஒரு... Continue Reading →
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது..?! – Crime Novel
பிறந்த வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு அன்று அதிகாலை தங்கை விஜயாவுடன் வந்து சேர்கிறாள் தாரிகா. நான்கு நாட்களுக்கு முன்பே கணவன் புஷ்பராஜ் வேலை விஷயமாக திருவனந்தபுரம் செல்வதாக தாரிகாவிற்குத் தகவல் தந்து விட்டுச் செல்கிறான். தன்னிடமிருந்த சாவியை உபயோகித்து பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்த தாரிகா, சுவரில் இருந்த ரத்தத் துளிகளைப் பார்த்துத் திகைத்தாள். போலீசிற்குத் தகவல் தெரிவித்த அவள், கலக்கத்துடன் காத்திருந்தாள். ரத்தத் துளிகளைத் தொடர்ந்து சென்ற போலீஸ், வீட்டிற்குப் பின்புறம் தோட்டத்தில் மண் இளகியிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.... Continue Reading →
விதி புதிது..! – Crime Novel
பெற்றோரை இழந்த வசந்தி சென்னைக்கு வேலை தேடி வருகிறாள். தோழி கல்பனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து தகவல் கொடுக்காமல் இரவில் அவள் வீட்டை அடைகிறாள் வசந்தி. கல்பனாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. விவரம் அறியாத வசந்தியைப் பின்தொடர்ந்து வந்த தேவ்-ரஷ்மி இருவரும் கல்பனாவைத் தேடி வந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். கல்பனாவிற்கு தெரிந்தவர்கள் என்று நம்பி அவர்கள் வீட்டிற்குச் செல்கிறாள் வசந்தி. ஆனால், பலான தொழில் செய்யும் தேவ்-ரஷ்மி இருவரும் அவளை இந்தத் தொழிலுக்குத் தள்ளத் திட்டம்... Continue Reading →
ராணி 2000..?!! – Crime Novel
இந்தியாவிற்கென ஒரு புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் கண்டுபிடிப்பில் மூழ்கியிருக்கிறாள் ராணி. சிறுவயது முதலே கம்ப்யூட்டர் துறையில் பூந்து விளையாடும் ராணி உலகம் முழுவதும் பேமஸ். இப்போது அவளுடைய திருமண வரவேற்பில் அவளைச் சந்திப்போம். ராணியின் திருமணத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டர் முதல் அமெரிக்க நண்பர்கள் வரை அனைவரும் ராணியைப் பற்றி புகழ்ந்து சொல்லிவிட்டு செல்ல, ரவிச்சந்திரனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. முதலிரவிலேயே அவளுடைய கம்ப்யூட்டர் ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறான் ரவிச்சந்திரன். தன்னுடைய ஆராய்ச்சியைப் பற்றிப் பெருமைப்படாமல் தனக்கு... Continue Reading →
ஜீவா ஜீவா ஜீவா – Crime Novel
டாக்டர் மகேந்திரனும் கம்ப்யூட்டர் ஸ்டுடென்ட்டான லலிதாவும் இரவு-பகலாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு ஜீவா என்னும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தனர். மனிதனின் மூளையை விட பத்து மடங்கு அதிகமாக சிந்திக்கும் திறனுடைய ரோபோ (ஜீவா) இப்போது இருப்பது Indian Institute of Science-ல். டெல்லியில் இருந்து Indian Institute of Science செமினாருக்குக் கலந்துகொள்ள வந்திருந்த புரபொசர் தன்பாலும் மித்ராவும் ஜீவாவை சந்திக்க விரும்பினர். ஜீவாவின் செயல்திறனைப் பார்த்து வியந்த மித்ரா ஆக்கப்பூர்வமான இந்தக் கண்டுபிடிப்பு அழிக்கப்பட வேண்டியது என்று... Continue Reading →
உயிர்த் திருடர்கள் – Crime Novel
தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ப்ளாக் ரோஸ்-க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் பாரதி. அங்குதான் லதிகா தற்சயம் தங்கியிருந்தாள். லதிகா – மொத்த நாடும் பார்த்து மிரண்டு நிற்கும் துணிச்சலான ஒரு ஜர்னலிஸ்ட், பாரதியின் உயிர்த்தோழி. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த இரண்டு மந்திரிகளின் வேலை போகக் காரணமாக இருந்தவள் லதிகா. அதனால் இயல்பாகவே அவளுக்கு எதிரிகள் அதிகம் இருந்தனர். இந்த வேளையில் தான் பாரதி அவளுக்கு பத்திரிக்கை கொடுக்க ஹோட்டலுக்குச் செல்கிறாள். எதிரிகள் பாரதி ஹோட்டலுக்குச்... Continue Reading →
நிழலின் குரல் – Crime Novel
சேகர் கிருஷ்ணாவிற்கும் சுகன்யாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ் அடித்த நிலையில், சேகர் கிருஷ்ணாவின் இரங்கல் செய்தி அடுத்த நாள் பேப்பரில் வெளியாகி சுகன்யாவையும் அவள் குடும்பத்தையும் அதிர்ச்சி அடையச் செய்கிறது. ஆனால், அது போலியான செய்தி என பின்னர் தெரியவர இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அன்றைய இரவே சேகர் கிருஷ்ணா கொலை செய்யப்படுகிறான். சேகர் கிருஷ்ணாவின் அப்பா ஐராவதமும் தம்பி முரளிகிருஷ்ணாவும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். நடந்தகொலைகளுக்கெல்லாம் காரணகர்த்தா யார்? கொலைகளின் நோக்கம் என்ன? விவேக்கிடம் குற்றவாளி... Continue Reading →
சர்ப்ப வியூகம் – Crime Novel
ஊட்டியில் உள்ள பிரபல தொழில் அதிபரான உமாபதி தன்னுடைய ஒரே மகளான துர்காவிற்கு வரன் தேடுகிறார். ஆனால் துர்காவும் வல்லப்பும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். வீட்டில் அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறாள் துர்கா. இந்நிலையில் எல்லாமே பொருந்திவர ஜாதகத்தில் வல்லப்பிற்கு களத்திர தோஷம் இருப்பது தெரிய வருகிறது. அதாவது திருமணமான ஆறே மாதத்தில் வல்லப்பின் உயிருக்கு கெடு வைக்கிறார் துர்காவின் குடும்ப ஜோசியர் மாதையா. பிடிவாதமாக இருந்த துர்கா வல்லப்பை திருமணம் செய்து கொள்கிறாள். யாரும் எதிர்பாராத வகையில்... Continue Reading →
இனி இல்லை இலையுதிர்காலம்..! – Crime Novel
இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் நஞ்சுண்டேஸ்வரன். தான் வாழ்வில் முன்னேற காரணமாக இருந்த மாமா நஞ்சுண்டேஸ்வரனைக் காப்பாற்ற விபரீத முடிவை எடுக்கிறார் ஷிவ்ராஜ். தன்னுடைய புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனிக்கு ஆட்களை இன்டர்வியூ செய்வது போல் நடித்து மாமாவிற்குப் பொருந்தக்கூடிய கிட்னியை எடுக்க ஆரோக்கியமான நபரைத் தேடுகிறார்கள் ஷிவ்ராஜும் அவருடைய மூத்த மகனான விஷ்வாவும். அந்த லிஸ்டில் இன்டர்வியூவிற்கு வருகிறாள் ஜனனி. ஜனனி – ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்.... Continue Reading →
நெஞ்சில் ஒரு நெருப்பு..! – Crime Novel
இரவு தூங்கிக்கொண்டிருந்த ராயப்பன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு நபர்களும் அட்டைக்கரி போல் உடல் கருகி சாவு – செய்தி. பாறைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராயப்பன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு வீடு எரிந்த கேஸில் துப்பு எதுவும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. கேஸிற்கு முற்றுப்புள்ளி வைக்க அதே கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் ரத்தினகுமாரை அனுப்பி விரிவான விசாரணை மேற்கொள்ள கமிஷனரிடம் இருந்து உத்தரவு வருகிறது. ரத்தினகுமாருடன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ரேகாவையும் உடன் அனுப்பி வைத்தார்... Continue Reading →
நவம்பர் ராத்திரிகள் – Crime Novel
தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை கொடைக்கானலில் உள்ள மாமா வீட்டிற்கு குடுத்து விட்டு கொண்டை ஊசி வளைவுகளில் நிதானமாக வண்டியை வளைத்து ஓட்டினான் சுபாஷ். மாலை நேர இருள் கவியும் நேரம். பைக்கை மறித்து நின்றாள் சித்ரா. காதலிப்பதாகச் சொல்லி சித்ராவுடன் ஊர் சுற்றிய சுபாஷ் பணக்கார சம்பந்தம் கிடைக்கவும் அவளைக் கேவலமாகப் பேசிவிட்டு அங்கிருந்து நழுவுகிறான். நடக்க இருந்த கல்யாணத்தைத் தடுத்து, சுபாஷின் மூச்சை நிறுத்த சித்ராவின் அண்ணன் அவளுக்கு ஒரு திட்டம் போட்டுக் குடுக்கிறான். எதிர்பாராத... Continue Reading →
விவேக் வியூகம் – Crime Novel
சேறும் சகதியுமாக இருந்த ரோட்டில் மிட்நைட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்த மங்களேஷும் பாசுவும் விஜிலன்ஸ் ஆபிசர் சுக்தேவ்வை திட்டிக்கொண்டே சென்றனர். இதுவரை இரவில் இப்படி அழைத்திராத சுக்தேவ் திடீரென அழைத்ததற்கான காரணம் புரியாமல் அவர் வீட்டை அடைந்தனர். வீட்டிற்குள் செல்லும் முன்... நாட்டின் மொத்த கரன்சி நோட்டுக்களையும் பிரிண்ட் செய்யும் இண்டியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் (நாசிக்) எலெக்ட்ரானிக் இன்ஜீனியர்ஸாக வேலை பார்க்கும் இருவரும் சுக்தேவ் வீட்டை அடைந்த பொழுது உட்கார்ந்த நிலையில் அப்பொழுது தான் ரத்தம் சிந்தி அவர்... Continue Reading →
கொன்றாள்..கொன்றான்..கொன்றேன் – Crime Novel
மங்களூர் எக்ஸ்பிரஸ் வேகமாகப் போய்க்கொண்டிருக்க அந்தக் கூபேயில் ஹரிபாபுவும் மேத்தாவும் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்தனர். டிக்கெட் செக் செய்ய வந்த டிடிஈ மோகன்ராஜை கூட்டு சேர்த்துக் கொண்டு குடித்து கும்மாளம் போட்டுக்கொண்டே வந்தனர். டிடிஈ-க்கு போதை அதிகமாகவே தங்களுடைய திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தனர் மேத்தாவும் ஹரிபாபுவும். கடத்திக் கொண்டுவந்திருந்த தங்க பிஸ்கெட்டுகளை டிடிஈ மோகன்ராஜின் பெட்டிக்குள் மறைத்து வைக்க உதவி கேட்கின்றனர். பயந்துகொண்டே ஒப்புக்கொண்ட டிடிஈ-யை இருவரும் சேர்ந்து சமாதானப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அடுத்த ஸ்டேஷனில் ஏறிய போலீஸ் மேத்தா-ஹரி... Continue Reading →
பகடைக் காய்கள்..! – Crime Novel
அண்டை நாடுகளுடனான போரை விலக்கி சமாதானத்தை முன்னிறுத்த பாராளுமன்றத்தில் இருந்து பொறுப்புள்ள எம்.பிக்களைக் கொண்ட ஒரு குழு பயணிகளுடன் சேர்ந்து விமானத்தில் பறக்க இருந்தது. அந்தத் திட்டத்தை முறியடித்து 7 எம்.பிக்களுக்கும் 8 பயணிகளுக்கும் விமானத்திலேயே சமாதி கட்டுவது தான் திட்டம். உஸ்மானும் பாபுராவும் முதலில் திட்டத்தை சொன்ன போது யோசித்த சென்னும் துவாரகேஷும் தொகை பெரிதாகப் பேசப்பட்டவுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர். இந்தத் திட்டத்திற்காக 25 கோடிக்கு விலை போன பைலட் சென்னும் கோ-பைலட் துவாரகேஷும் திட்டத்தை... Continue Reading →
தப்பு செய்.! தப்பிச்செல்..!! – Crime Novel
“குடுவைக்குள் இருந்து வெளியே எடுத்த 30 வினாடிக்குள் வெடிக்கும் ஒப்வா லசிகா ஒரு காந்தம் போன்று செயல்படக்கூடியது. டார்கெட் செய்த இடத்தில் இருக்கும் ஏதாவதொரு காரில் ஒட்ட வைத்துவிட்டால், பெட்ரோல் டாங்க் வெடித்து சேதாரம் அதிகமா இருக்கும் என்பதால் இந்த வெடிபொருள் தீவிரவாதிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது” என்ற தகவல் லலித் சர்மாவின் அடிவயிற்றைக் கலக்கியது. இந்தியாவின் இராணுவ ஏர் மார்ஷல் பிலிப்ஸ் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக ரகசியமாக ரோமிற்கு வந்து இத்தாலியின் இராணுவ... Continue Reading →
தனித்திரு.! விழித்திரு..! – Crime Novel
பிரதாப்பை விரும்பும் அட்சதா தன்னுடைய முதலாளியின் பையன் சரணை ஏற்க மறுத்து விருப்பத்தைச் சொல்ல நாட்களைக் கடத்துகிறாள். இந்நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்த அட்சதாவின் அண்ணன் சபாபதிக்கு வேலை கிடைக்கிறது. ஒரு வாரம் ட்ரெய்னிங்கிற்காக அவன் மும்பை செல்ல வேண்டியிருந்தது. சிட்டியிலிருந்து ஒதுக்குப்புறமாக குடியிருக்கும் சபாபதியும் அட்சதாவும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். தங்கையைத் தனியே விட்டுச் செல்ல தயங்கிய சபாபதி, பால்ய நண்பன் லீலாகிருஷ்ணன்-வாசுகி வீட்டில் அவளை விட்டுச் செல்கிறான். ஏற்கனவே பிசினஸில் ஏகப்பட்ட நட்டம் ஏற்பட்டு கஷ்டத்தில்... Continue Reading →
BitTalk-இல் ராஜேஷ்குமார் நாவல் தொடர் இலவசமாகப் படிக்க – அமிர்தம் என்றால் விஷம்..!
வாராவாரம் ஆரவாரமாக ராஜேஷ்குமார் சாரின் “அமிர்தம் என்றால் விஷம்” திக் திக் தொடர் இலவசமாக BitTalk-இல் வலம்வந்து கொண்டிருக்கிறது. தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் 36 வாரங்கள் தொடர்கதையாக வெளிவந்த இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்கள் உங்களுக்காக இப்போது BitTalk-இல். முகம் பத்திரிக்கை பிரஸ் ரிப்போர்ட்டர்ஸான பாரியும் நிருபமாவும் இருட்டு விலகாத அதிகாலை நேரத்திலேயே அமைச்சர் கார்மேகவண்ணனின் பிறந்தநாள் விழாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். கேமராவை மறந்து வண்டியிலேயே விட்டுச் சென்ற பாரி அதை எடுத்து வர வண்டி பார்க்... Continue Reading →
வாஷிங்டனில் விவேக்!! – Crime Novel
நள்ளிரவு நேரத்தில் சி.பி.ஐ ஆபிசிற்கு பைக்கில் விரைந்து கொண்டிருந்த விவேக்கின் வழியைக் குறுக்கிடும் விதமாக கார் ஒன்று ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கிய விவேக்கை நான்கு பேர் கொண்ட குழு கடத்திச் செல்ல, விவேக் யோசனையுடன் சென்றான். அங்கே அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சிபிஐ சீஃப் வாத்சல்யனுடன் இரண்டு சிஐஏ அதிகாரிகளான கேரி மற்றும் ஹோம்ஸை விவேக் அங்கு சந்தித்தான். வந்திருந்த அமெரிக்கர்களுக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க நடத்தப்பட்ட டிராமா தான் இந்த கடத்தல்... Continue Reading →
அந்த ரத்த நாட்கள்?! – Crime Novel
சங்கர நாராயணன் டேப்பில் ரெக்கார்ட் செய்து எடுத்து வந்திருந்ததைப் போட்டுப் பார்த்த விவேக் அதிர்ந்து போனான். இரண்டு நபர்கள் உரையாடிய சம்பாஷணையின் சாராம்சம் இதுதான்..தமிழ்நாட்டில் வைத்து பிரதமர் ஆகாஷைக் கொல்வது. இதற்கு நடுவில் எதிர்கட்சித் தலைவர் காந்திலால் வயது மூப்பின் காரணமாக பாத்ரூமில் கால் இடறி கோமா ஸ்டேஜிற்குச் செல்கிறார். பிரதமரின் செயலாளர் வாத்வா சொன்ன இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்த பிரதமர் ஆகாஷ், எப்பாடு பட்டாவது காந்திலாலைக் காப்பாற்ற சொல்கிறார். பிரதமர் கூறியதாகச் சொல்லி காந்திலாலை... Continue Reading →
என் வானம் மிக அருகில் – Crime Novel
சினிமாவில் கொஞ்ச கொஞ்சமாகப் பாட்டெழுதி பிரபலமாகிக் கொண்டு வந்தான் குறிஞ்சி. அன்றைய தினம் ஒரு பத்திரிக்கைக்குக் காரசாரமாகப் பேட்டி கொடுத்து முடித்துவிட்டு பாட்டை டைரக்டரிடம் பாடிக் காட்ட இருந்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம். பாடகியான தன் காதலி ரமாவும் குறிஞ்சியிcன் பாடல் வரிகளைக் கேட்டுவிட்டுப் பாராட்ட, டைரக்டரின் எதிர்பார்ப்போ வேறு மாதிரி இருந்தது. ஏற்கனவே எடுத்த படத்தில் புதுமுக கவிஞர் மோதி எழுதியிருந்த ரெட்டை அர்த்தப் பாடல்கள் ஹிட் அடித்ததால் குறிஞ்சியையும் அதேபோல் ரெட்டை அர்த்த வரிகளில் பாட்டெழுத... Continue Reading →
விபரீதங்கள் இங்கே விற்கப்படும்..! – Crime Novel
துப்பாக்கியோடு வந்து வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வளர்மதியைப் பார்த்து சற்று அரண்டு தான் போனார் ஈஸ்வர். பிரபல தொழிலதிபரான ஈஸ்வர் சொந்தப் பணத்தில் வருடந்தோறும் ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் செய்துவைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். இப்படிப்பட்ட ஈஸ்வரை வேவு பார்க்க வந்தவள் தான் வளர்மதி. குடும்பத்திற்கும் கணவர் ஹரிக்கும் தெரியாமல் போலீஸ் இன்பார்மராக இருப்பவள். தைரியசாலியான வளரின் சிறுவயது போலீஸ் கனவு நிறைவேறாத காரணத்தால் மறைமுகமாக கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு கீழே இப்போது இன்பார்மராக... Continue Reading →
என்றாவது ஒருநாள்..! – Crime Novel
தந்தையுடன் மெட்ராஸில் இருந்து வந்திருந்த புனிதா, நாலு நாளாக அவளுடைய வீடு பூட்டிக் கிடப்பதாக பக்கத்து வீட்டு மாமி கூறியதும் அதிர்ச்சி அடைகிறாள். தன்னுடைய கணவன் ராதாகிருஷ்ணனுடைய ஆபிஸ் நம்பருக்கு போன் செய்த போது அவன் மெட்ராஸிற்கு சென்றிருப்பதாக கூறியவுடன் மேலும் கலக்கமடைந்தாள். சற்று நிதானித்த அவள் பிறகு மாமியிடம் இருந்து கீ பன்ச்சை வாங்கி வீட்டைத் திறக்க முற்படுகிறாள். அதற்குள் ராதாகிருஷ்ணனைப் பற்றிப் பார்த்து விடுவோம். டயர் கம்பெனியில் கிளார்க்காக வேலை செய்யும் ராதா, பகுதி... Continue Reading →
நீ மட்டுமே வேண்டும்..! – Crime Novel
ஏரியாவில் இருக்கும் சில ரௌடிகள் தன்னிடம் வம்பிழுப்பதாகவும், அதனால் தனக்கு கராத்தே சொல்லிக்கொடுக்கும்படி சத்யேசுவிடம் வேண்டிக் கேட்கிறாள் சுகிர்தா. ஆண்களுக்கு மட்டுமே கராத்தே சொல்லிக்கொடுத்து, பகுதி நேர டிடெக்டிவாகவும் இருக்கும் சத்யேசு யோசித்து முடிவெடுப்பதாகக் கூறி அவளை அனுப்பி வைக்கிறான். விதி வலியது. இந்தப் பெண்ணுக்காக தன்னுடைய கராத்தே பள்ளி விதிகளை கைவிட வேண்டுமா..? என்று எண்ணிக் கொண்டிருந்த சத்யேசுவிற்கு மிரட்டல் போன் வருகிறது. போன் செய்தவன் சுகிர்தாவிற்கு கராத்தே கற்றுக் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கிறான்.... Continue Reading →
இரத்தம் இல்லாத யுத்தம் – Crime Novel
படிப்பு வாசனையே அறிந்திராத பழங்குடியினர்கள் வாழும் நரிக்கொம்பு கிராமத்தில் இருந்து எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையைப் படிக்க சொல்லி குணால், ஜெனிஃபரிடம் நீட்டினார் லென்ஸ் வார இதழின் எடிட்டர். சிம்பிளான வரிகளில் சிறப்பாக எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையைப் படித்த இருவரும் வியந்தனர். அந்தக் கவிதையை எழுதியிருந்த இசக்கி என்ற பெண்ணை சந்தித்து மேலும் அந்த கிராமத்தில் நடப்பவற்றை கவர் ஸ்டோரியாகக் கொண்டு வர இருவரையும் நரிக்கொம்பு ஃபாரெஸ்ட்டுக்கு அனுப்புகிறார் எடிட்டர். பழங்குடியினக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க அந்த கிராமத்திற்கு... Continue Reading →
கோடி கோடி மின்னல்கள்..! – Crime Novel
தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அதிலிருந்து அவர்களை மீட்பதற்காக “மனசுக்குள் மழையா..?” என்ற பெயரில் சைலென்ட்டாக சமுதாயப் பணியாற்றிவரும் வைகை, அந்த ‘மெட்டியோசை’ பெண்கள் மாத இதழுக்கு பேட்டி கொடுக்க மறுத்து விடுகிறாள். மன நிம்மதிக்காக செய்யும் ஒரு விசயத்தை விளம்பரம் போட்டு வியாபாரமாக்குவதை விரும்பாத வைகை, ஹன்ஸா ஹாஸ்பிடலில் டைபிஸ்ட் வேலையில் இருப்பவர். அதிர்ஷ்டவசமாக வைகையின் தொண்டுப் பணிக்கு தயாநிதி அறக்கட்டளையில் சார்பில் 5 லட்ச ரூபாய் கிடைக்க, அதை வைத்து சேவையைத் தொடர... Continue Reading →
சிவப்பின் நிறம் கருப்பு..?! – Crime Novel
அந்த அதிகாலை வேளையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாவின் வீட்டுக்கு வர, அவளுடைய அப்பா சத்தியமூர்த்தி சற்று திகைத்துப் போனார். பின் சுதாரித்த அவர், அருணாவை அழைத்து வந்தார். கைனகாலஜிஸ்ட் டாக்டரான அருணா, முந்தைய நாளிரவு நடந்த சம்பவங்களை அசைபோட்டபடியே வந்தாள். அந்த முன்னிரவு வேளையில் காரில் வந்துகொண்டிருந்த அருணா, ரோட்டில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவனைக் காப்பாற்ற போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு வீடு வந்து சேர்கிறாள். ஆனால், கதையின் முக்கிய திருப்பம் ஆரம்பத்திலேயே வந்து அருணாவைத் திணறடிக்கப்... Continue Reading →
வெற்றி என்றால் விவேக்.! – Crime Novel
மைக்ரோ பயலாஜிகல் ரிசர்ச் ஸ்காலரான ஸ்வப்னா காணாமல் போய் ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், அன்றைய தினம் அவளுடைய பிணத்தைப் போலீசார் கைப்பற்றியிருந்தனர். ஸ்வப்னா கடைசியாக விவேக்கிற்கு எழுதிய முற்றுப்பெறாத அந்தக் கடிதம் போலீசிற்கு தடயமாகக் கிடைக்கிறது. அதில் அவள் “இந்த லெட்டருடன் நான் அனுப்பியுள்ள ஆ..” என்று ஆரம்பிப்பதற்குள் அவள் எழுதியிருப்பது தடைப்பட்டிருந்தது. இதன் மூலம் அவள் லெட்டருடன் வேறு எதையோ சேர்த்து அனுப்ப திட்டமிட்டிருப்பதை உணர்ந்த விவேக், விஷ்ணுவிடம் அந்த விசாரணையை மேற்கொள்ள சொல்லிவிட்டு... Continue Reading →
ஊசி முனையில் உஷா..! – Crime Novel
இந்த முறை ஆபிசிற்கே வந்து காதலை சொன்ன விஜயகுமாரை எரித்து விடுவது போல் உஷ்ணமாகப் பார்த்தாள் உஷா. ஆனால், அவன் விடுவதாக இல்லை. திடீர் விஜயமாக அன்று மாலையே குடும்பத்துடன் உஷாவைப் பெண் பார்க்க வீட்டிற்கே வந்துவிட்ட விஜயகுமாருக்கு ஒரு அதிர்ச்சி. திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென ஒரு விபத்தில் உயிரிழந்த காதலன் குணாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக எண்ணி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வறுமையில் இருந்த குணாவின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள் உஷா. உஷா... Continue Reading →
இன்னொரு அத்தியாயம் – Crime Novel
போனில் வந்த செய்தியைக் கேட்டதிலிருந்து நொறுங்கிப் போயிருந்தாள் சாந்தா. இதோடு இரண்டாவது முறையாக அவளுடைய அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வர அயர்ந்து போனாள். கணவனின் ஆபிசிற்கு போன் செய்து தகவலைத் தெரிவித்துவிட்டு, அவளுடைய ஆபிசில் லீவ் சொல்லிவிட்டு உடனே மருத்துவமனைக்குக் கிளம்பினாள். ஹாஸ்பிடலில் அவளுக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருந்தது. தன்னுடைய தந்தைக்கு உடனே பைபாஸ் சர்ஜரி செய்ய லட்ச ரூபாய் செலவாகும் என டாக்டர் சொல்ல இடிந்து போனாள் சாந்தா. மாலையில் சாவதானமாக மாமனாரைப் பார்க்க... Continue Reading →
அனு ஓர் ஆச்சர்யம் – Crime Novel
மனோவுடன் விவாகரத்து கிடைத்த சந்தோசத்துடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்த பிரபல நடிகை அனுலேகா, விரைவில் தொழிலதிபர் சுபாஷை மறுமணம் செய்யப் போவதாக பிரஸ் மீட்டில் தெரிவிக்கிறாள். அனுவை நடிகையாக்குவதற்காக அவளின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மனோ தனித்து விடப்பட்டான். சுபாஷ் பணத்திற்காகத் தான் அனுவிடம் பழகுவதாக முன்னாள் கணவன் மனோ அவளை எச்சரித்துச் செல்கிறான். சுபாஷின் உண்மையான சுயரூபம் அனுவின் மேனேஜர் மூலமாகத் தெரிய வருகிறது. அதன் பிறகு, உடன் நடிக்கும் ஹேமந்த்தின் அன்பை புரிந்துகொண்டு அவனுடன்... Continue Reading →
ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களை இலவசமாகப் படிக்க..!
One india tamil-வலைத்தளத்தில் நமக்கு விருப்பமான, க்ரைம் கதைகளின் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் க்ரைம் நாவல்களை வாசித்து, திகிலை ரசித்து மகிழுங்கள்.. One india tamil-ல் தற்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று விறுவிறுப்பான “ஃப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட்” தொடர் வெளிவந்து வாசகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கீழே உள்ள லிங்க்கை க்ளிக்கி நாவலை வாசிக்கத் தொடங்குங்க வாசகர்களே..! https://tamil.oneindia.com/topic/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-144-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D “விபரீதங்கள் இங்கே விற்கப்படும்” நாவலைப் படிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக்கவும்.. https://tamil.oneindia.com/topic/rajesh-kumar-crime-novels?page-no=4... Continue Reading →
பவளப் பள்ளத்தாக்கு – Crime Novel
புரபொசர் சூர்யநாராயணன் திடீரென கண்விழித்த போது, தான் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். இதற்கு முன் நடந்த சம்பவங்கள் அவரது மனதில் ஓடின. ஜனாதிபதி கையால் விருது வாங்கக் காத்திருந்த அவர் திடீரென வியர்த்துக் கொட்டி, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்திருந்தார். அந்த அறையில் இருந்த இருவர், புரபொசரைக் கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தனர். அவர்களது கேள்வி இதுதான்.. பயோஸான் 4 நுண்ணுயிர்கள்!! அதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது மறுத்துக் கொண்டிருந்த புரபொசருக்கு முன்னால், அவர்கள்... Continue Reading →
சிம்லா ரம்யா..?! – Crime Novel
அன்று மாலை ரம்யாவைப் பெண் பார்க்க செல்ல இருந்தான் ரகுநாதன். ஆனால், தன்னுடைய மோசமான பழக்கவழக்கங்களைப் பற்றி அட்சரசுத்தமாக புட்டுப்புட்டு வைத்துவிட்டு சென்ற ரம்யாவை நினைத்து அந்த நிமிடம் மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்தான் ரகு. அவளைப் பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தான். அதே நேரம் தனக்கு வரும் வரன்களைக் காரணம் சொல்லி தட்டிக்கழித்துக் கொண்டிருந்த அந்த ரம்யா, பிரபாகரிடம் சற்று பயத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். பிரபாகரும் ரம்யாவும் காதலர்கள். வரன்களின் உண்மையான சுயரூபத்தை அவர்களிடமே சொல்லி விலக வைப்பது அவர்களின்... Continue Reading →
அதே இரவு..! – Crime Novel
நான்கு வருட சிறைத்தண்டனை முடிந்த ரதீஷ், தன்னுடைய காதலி சூர்யாவை சந்திக்க அவள் வீட்டிற்கு வருகிறான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சூர்யாவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜனுடன் திருமணம் முடிந்திருந்தது. திருமணமான விசயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்த ரதீஷின் கையில் இருந்தது சூர்யா கொடுத்திருந்த லவ் லெட்டர். சூழ்நிலை காரணமாக சூர்யாவிற்காக சிறைக்கு சென்ற ரதீஷ், தன்னை அவள் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால், அந்த லெட்டரை வைத்து சூர்யாவிடம் பணம்கேட்டு அவளை ப்ளாக்மெயில் செய்கிறான். தன் கணவர் ராஜனுக்குத் தெரியாமல்,... Continue Reading →
நீல நிற நிமிஷங்கள்.! – Crime Novel
புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான கிருபாவின் அப்பாவிற்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட, ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்கள். கிருபாவின் ரசிகை என சொல்லிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கே போன் வர, பெண் குரலில் பேசிய ஒருவன் கிருபாவிடம் தவறான நோக்கத்துடன் பேசுகிறான். இந்த விசயத்தைக் கிருபா தன் அம்மா வசுந்தராவிடம் கூற, கிருபாவின் அம்மாவிற்கும் அதேபோல் அழைப்பு வர, உதவி போலீஸ் கமிஷனரிடம் விசயத்தைக் கொண்டுபோகிறாள் வசுந்தரா. மேற்கொண்டு தான் பார்த்துக்கொள்வதாக போலீஸ் சொல்லி செல்ல, ஒருநாள் வீட்டிற்கே வந்து மிரட்டுகிறான்... Continue Reading →
உதடுகள் சுடும்..?! – Crime Novel
மும்பையில் உள்ள தனது ஆட்டோ காரேஜை நிழல் காரியங்களுக்கு பயன்படுத்தி வந்த நகுல் லட்சாதிபதியாவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. குபேர் என்ற பணக்காரரிடம் உள்ள புகைபிடிக்கும் பைப்பில் கோடிக்கணக்கான மதிப்புள்ள டிவைன் வைரங்கள் இருப்பதாகவும், அதை எடுத்துக் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க ஆள் தயாராக இருப்பதாகவும் நண்பன் சாம்பமூர்த்தி சொல்ல, களத்தில் இறங்குகிறான் நகுல். ஐந்து லட்சத்திற்கு விலை போகக்கூடிய பழங்கால புகைக்கும் பைப் குபேரிடம் இருப்பதாகக்கூறி அதை எடுத்துத் தருமாறு, அவரது... Continue Reading →
அக்கறையாய் ஒரு அக்கிரமம் – Crime Novel
கார்த்தீஷ்-நிகிலாவின் எதிர்வீட்டிற்கு புதிதாக ஜெயபால்-ஹேமா தம்பதி குடிவருகின்றனர். முன்பகை காரணமாக சண்டை போட்டு பிரிந்திருந்த முன்னாள் நண்பன் ஜெயபாலைப் பார்த்த கார்த்தீஷ் வெகுண்டான். சமாதானப்படுத்த வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயபாலை சந்திக்க மறுக்கிறான் கார்த்தீஷ். லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொருட்களைக் கடத்த திட்டம் போட்ட கும்பலைப் பிடித்துக்கொடுத்த ஃபாரஸ்ட் ரேஞ்ச் ஆபிசர் கார்த்தீஷைப் பழிவாங்குவதற்காக அவன் வீட்டிற்குள் நுழைகிறான் ஒருவன். வீட்டில் அவன் மனைவி நிகிலா மட்டுமே இருக்க, அவளை மிரட்டி கார்த்தீஷ் வரும்வரை காத்திருந்து... Continue Reading →
உடைந்த இரவு – Crime Novel
மனைவி மைத்ரேயி வந்த நேரம் தான், தன்னுடைய கம்பெனியின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்று பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தான் தினேஷ். ஆனால், மைத்ரேயியோ அதற்கு நேர்மாறாக கணவனை ஏமாற்றிக்கொண்டே தன் முன்னாள் காதலன் பாஸ்கருடன் தவறான தொடர்பு வைத்திருந்தாள். இதற்கிடையில் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் தினேஷை ஒரேயடியாக தீர்த்துக்கட்டி விட்டு இருவரும் சந்தோசமாக இருக்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் போன் செய்து மைத்ரேயியை மிரட்டுகிறாள். பாஸ்கருடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என்றும் இனி கணவனுடன் ஒழுங்காக... Continue Reading →
விரைந்து வா விவேக் – Crime Novel
தன்னுடைய மனைவி நளினியின் நடத்தையில் சந்தேகப்படும் கெளதம், அவளைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓடும் ரயிலில் சிங் வேஷம் போட்டு நளினியைத் தீர்த்துக்கட்டிவிட்டு தற்கொலை போல சித்தரிக்கத் திட்டம் தீட்டுகிறான். இன்னொரு பக்கம் மந்திரி பதவி பறிபோகக் காரணமாகக் காரணமாக இருந்த ரிப்போர்ட்டர் நீரஜாவைத் தீர்த்துக்கட்ட காத்திருந்த கோதண்டத்திற்கு, தணல் தங்கராஜ் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுக்கிறான். அதன்படி ஒத்தக்கால் தாமஸ் என்ற ரவுடியை வைத்து ரயிலில் நீரஜாவின் உயிரைப் பறிப்பதாகத் திட்டம். கொலைத்திட்டங்களுக்கு நடுவில்... Continue Reading →
கிழக்கே போகும் உயிர்..?! – Crime Novel
அடிபட்டு விழுந்துகிடந்த அந்த இளைஞனின் பெயர் தாஸ் என்று அவன் டயரியை வைத்து டிராபிக் போலீஸ் கண்டுபிடித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த கோகுல்நாத்தும் அவினாஷும் வேறு தடயங்களைத் தேடிக் கொண்டிருக்க, ஒரு துண்டு சீட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கிடைத்தது. “Life Towards East” என்று அந்த சீட்டில் எழுதப்பட்டிருந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப் போயினர் போலீஸ். தாஸின் வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு கிடைத்தது, அவன் காதலி சந்தியாவின் அட்ரஸ். சந்தியாவைத் தேடிச்சென்ற போலீஸுக்கு அவளின்... Continue Reading →
தித்திக்கும் தீ..! – Crime Novel
பைகாரா அணையைப் பற்றிப் பேட்டி எடுக்கப் போவதாக அணையின் நிர்வாகி சிக்கந்தரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட லட்சணா, அவரிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அணையில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். நீச்சல் தெரியாத சிக்கந்தர் மிகவும் கஷ்டப்பட்டு அவளைக் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கிறான். உண்மையில் வந்திருந்த அவள் பிரஸ் ரிப்போர்ட்டர் இல்லை என்பதை அறிந்த சிக்கந்தர் திடுக்கிடுகிறான். சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்து அனாதை விடுதியில் வளர்ந்த லட்சணா தன்னுடைய தற்கொலைக்கான காரணத்தை யாரிடமும் தெரிவிக்க மறுத்துவிடுகிறாள். காதல் தோல்வியால் தற்கொலைக்கு... Continue Reading →
விவேக் விஷ்ணு வெற்றி..! – Crime Novel
கண்டிப்புக்கு பேர்போன அந்த லேடிஸ் ஹாஸ்டலுக்கு விவேக் சென்ற போது நேரம் முன்னிரவைத் தாண்டியிருந்தது. வார்டனின் அவசர அழைப்பால் ஹாஸ்டலுக்கு விரைந்துவந்த விவேக் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்றான். மொட்டை மாடியில் தண்ணீர்த் தொட்டிக்கு அருகில் ஒரு இளைஞனின் பிணம் சாய்த்து உட்காரவைக்கப்பட்டிருந்தது. பிணத்திடம் இருந்து கிடைத்த தபால் ரசீதை தடயமாக வைத்துக்கொண்டு அது சம்பந்தமாக விசாரிக்க சென்ற விஷ்ணுவுக்கு, அதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அடையாளம் தெரியாத அந்தப் பிணத்தை பற்றிய உண்மையோடு... Continue Reading →
நிழலின் நிறம் சிவப்பு..?! – Crime Novel
ஸ்டெனோவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யாவைப் பெண் பார்க்க வந்திருந்தவர்கள் அளவுக்கு அதிகமாக வரதட்சணை கேட்க, மாப்பிள்ளை வீட்டாரிடம் பாக்யா சண்டை போட, பார்த்துக்கொண்டிருந்த அவளின் அம்மா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே மடங்கி விழுகிறாள். பாக்யாவின் அம்மாவிற்கு உடனடியாக இருதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல். ஆபிசில் முதலாளி ரகோத்தமராவிடம் கடனாகப் பணம் கேட்கப் போன பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. வயதான தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே பண உதவி கிடைக்கும் என முதலாளி சொல்ல..பாக்யா... Continue Reading →
எங்கும் விவேக்..! எதிலும் விவேக்..! – Crime Novel
அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளவிருக்கும் விஞ்ஞானிகளைக் கொல்வதற்கு டைனமைட்டை வெடிக்க வைக்க அந்தக் கூட்டத்திலேயே ஒரு கருப்பு ஆடு இருக்கிறது. இதுபற்றி உளவுத்துறைத் தலைவர் சக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது. உதவிக்கு விவேக்-விஷ்ணுவைக் கூப்பிட்ட உளவுத்துறைத் தலைவர், அந்தக் கருப்பு ஆடு யார் என்பதையும், அவருக்கு கிடைத்த தகவல் பற்றியும் கூற, விசயத்தைக் கேள்விப்பட்ட விவேக் திடுக்கிட்டான். கதையில் திடீர் திருப்பமாக ரகசிய தகவல் கொடுத்த ராஜமாணிக்கத்தின் சலடம் போலீசிற்கு கிடைக்கிறது. இதற்கடுத்ததாக ராஜமாணிக்கத்தின் காதலி புவனேஸ்வரியைக் கொலைவெறியுடன்... Continue Reading →
பணம்..பதவி..பலி..! – Crime Novel
MLA எலக்சனில் அமோக வெற்றி பெற்ற உற்சாகக் களிப்பில் இருந்த மாணிக்கராஜுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் மந்திரிப் பதவியேற்றால் உயிர் பறிக்கப்படும் என்றிருக்க, அந்த மொட்டைக் கடுதாசியைக் குப்பையில் கிழித்துப் போட்டார் மாணிக்கராஜ். விதி வலியது..முதல்வரை சந்திக்கச் சென்னை செல்ல இருந்த மாணிக்கராஜ் ரயில்வே ஸ்டேஷனில் வைத்தே கொலை செய்யப்படுகிறார். இதற்கடுத்ததாக முதல்வராகப் போகும் ராமபத்ரனுக்கு ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில் ஐந்து பேரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மந்திரி பதவி தரக்கூடாது... Continue Reading →
5am to 5 pm – Crime Novel
ஜப்பானில் தொழிற்பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய கீர்த்தியுடன் திடீர் திருப்பமாக நிறைமாத கர்ப்பிணியான காதரினா வந்திறங்க, அண்ணன் லீலாகிருஷ்ணன் திடுக்கிடுகிறான். இந்நிலையில் அண்ணன் லீலாகிருஷ்ணனைப் பற்றிய ஒரு மொட்டை கடுதாசி தம்பியிடம் சிக்குகிறது. லாபத்தில் போய்க்கொண்டிருந்த கம்பெனி திடீரென நஷ்டத்தில் ஓடுவதாக கீர்த்திக்கு கணக்கு காண்பிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டுபிடித்த கீர்த்தி அவன் அண்ணனிடம் சண்டை போடுகிறான். மொத்த சொத்தையும் அபகரிக்கத் திட்டம் போட்ட லீலாகிருஷ்ணனும் அவன் மனைவியும் கீர்த்தியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கின்றனர். காதரினாவுடன் கீர்த்தி கிளம்பிய... Continue Reading →
திக்…திக்…டிசம்பர் – Crime Novel
வேலை கிடைத்த சந்தோசத்தின் உச்சத்தில் இருந்த ஹரிஷின் தலைக்குள் திடீரென ஒரு பிரளயம் ஏற்பட்டது. மூக்கில் இருந்து ரத்தம் வடிய அப்படியே சரிந்தான் அவன். ஹாஸ்பிடலில் அவனுக்கு எய்ட்ஸ் நோய் என்று ரிப்போர்ட் வருகிறது. அங்கேயே அவனுடைய அம்மா இறக்க, காதலி மீரா அவனை விட்டு விலக, இதனால் மனநோயாளியாகிறான் ஹரிஷ். ஸ்டெரிலைஸ் செய்யப்படாத ஊசி போட்டுக்கொண்டதால் தான், தனக்கு எய்ட்ஸ் வந்திருப்பதாக டாக்டர் ஒருவர் சொன்னதை நம்பிய ஹரிஷ் டாக்டர்களை வெறுக்கிறான். தன்னுடைய ரத்தத்தால் “ஐ... Continue Reading →
உள்ளத்தைக் கிள்ளாதே – Crime Novel
நீலேஷ் கம்பெனி விஷயமாக ஃபாரீன் சென்றுவிட்டதால், நிர்வாகப் பொறுப்பை சில மாதங்களுக்கு தங்கை திலக்ஷனா பார்த்துக்கொண்டிருந்தாள். தங்கள் கம்பெனியின் பெயிண்ட் ஃபார்முலா வேறொரு கம்பெனிக்கு விற்கப்பட்டதை அறிந்த திலக்ஷனா, அதற்கு காரணமான கணேஷமூர்த்தியை சஸ்பென்ட் செய்கிறாள். கோபத்தில் கொதித்த கணேஷமூர்த்தி திலக்ஷனாவைப் பழிதீர்க்க மோசமான ஒரு திட்டம் தீட்டுகிறான். இதற்கிடையில் மூணுமாத கர்ப்பிணியான நிவேதனா, நீலேஷைத் தேடிக்கொண்டு புனேவில் இருந்து வந்து எதிர்பாராதவிதமாக கோமா நிலைக்கு செல்கிறாள். அவ்வப்போது கோமாவில் இருந்து நினைவு திரும்பும் நிவேதனா யார்..?... Continue Reading →
11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள் – Crime Novel
ஒரு ரகசிய ப்ராஜெக்ட்டை, தன்னுடைய பர்சனல் அசிஸ்டெண்ட் ராஜூக்கு கூட தெரிவிக்காமல், பரம ரகசியமாக செய்து கொண்டிருந்தார் ப்ரொபசர் மெஹ்ரா. மெஹ்ராவின் இளம் மனைவி ரெஜிதாவை மட்டும் ஒருமுறை ப்ராஜெக்ட் அறைக்கு அழைத்துச் செல்கிறார். யாருமே அறிந்திராத அந்த ரகசிய ப்ராஜெக்ட் - மனித உணர்வுள்ள ரோபோ “ஸ்ரீ”. ரெஜிதாவைத் தவறாகப் பார்த்து அவளை அடைய நினைக்கிறது அந்த ஸ்ரீ. இந்நிலையில் ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருக்க, அதன் தகவல்களைத் திருடித் தருமாறு ராஜின் காதலியைக் கடத்தி,... Continue Reading →
ஜன்னல் நிலா! – Crime Novel
சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கு, திடீரென நடிகையாகும் வாய்ப்பு கிடைக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் அவள், தன்னுடைய காதலைத் தியாகம் செய்ய நேரிடுகிறது. பிரபல நடிகரின் சூழ்ச்சியால் நடிகையான அவளுக்கு பின்னால் பின்னப்பட்டிருக்கும் சதியை அவள் உணரும்போது அவளுடைய காதலனை இழக்கிறாள். எல்லாவற்றிக்கும் மேலாக யாருக்காக தன்னுடைய காதலை இழந்தாலோ அவர்களின் சுயரூபம் அந்த நடிகைக்குத் தெரியவர, குழப்பத்தில் இருந்த அவள் சாவைத் தேர்ந்தெடுத்துப் பின் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறாள். குடும்ப சூழல் ஒரு... Continue Reading →
இருட்டுக்கு இரண்டு நிறம்..(?) – Crime Novel
எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாக வந்துவிட வேண்டும் என்பது கணேசனின் அவா. மனோகரி ஒரு கம்பெனியில் டைபிஸ்ட்டாக வேலை செய்பவள். இருவரும் காதலர்கள். பணம் பத்தும் செய்யும் என்பது இவர்கள் இருவருக்கும் சரியாகப் பொருந்தும். சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற கணேசனுக்கு ஒரு பிரபல நடிகையைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க, மனோகரிக்கு அவள் முதலாளியைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பது போலவே நடித்து தங்கள் கனவு நிறைவேற... Continue Reading →
உறைந்து போன உண்மை – Crime Novel
அந்த நிமிடம் ஹாஸ்பிடலில் இருந்த கீர்த்தனாவுக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல கண்முன் வந்துபோனது. கீர்த்தனாவின் அப்பா அஸ்வினிகுமாரை மாப்பிள்ளையாக செலக்ட் செய்தது, அஸ்வினிகுமாரை மீட் பண்ண கீர்த்தனா ரெஸ்டாரன்ட் போனது, அங்கே அவன் மூச்சுபேச்சற்ற நிலையில் இருந்தது, ஹாஸ்பிடலில் சேர்த்ததும் அவனுடைய செல்லுக்கு போலீசிடமிருந்து போன் வந்தது, இது எல்லாவற்றையும் விட அஸ்வினிகுமார் ஒரு மாதம் பாண்டிச்சேரி மென்டல் கேர் ஹாஸ்பிடலில் தங்கி ட்ரீட்மென்ட் எடுத்தது பற்றி அங்கிருந்த நர்ஸ் சொல்ல கீர்த்தனா சற்று ஆடித்தான்... Continue Reading →
அந்த சந்திரனே சாட்சி.! – Crime Novel
குன்னூர் இருட்டுக்குள் விழுந்துகொண்டிருந்த அந்த வேளையில், தன்னுடைய கார் ரிப்பேர் ஆனதால் கொண்டைஊசி வளைவில் கவலையுடன் உதவிக்கு காத்திருந்தாள் சுபலேகா. ஆனால், இரண்டு ரௌடிகளிடம் சுபலேகா மாட்டிக்கொள்ள அவளை வேனில் கடத்திச் செல்கிறார்கள். லேகாவின் பக்கத்து எஸ்டேட்டில் வேலை செய்யும் சதீஸ் அவளைக் காப்பாற்றுகிறான். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில் பெற்றோர்களை இழந்திருந்த லேகாவிற்கு திருமணம் செய்ய அவளுடைய மாமா அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டம் போடுகின்றனர்.... Continue Reading →
மீண்டும் விவேக்கின் விஸ்வரூபம் – Crime Novel
இந்திய ராணுவத்திற்காக 90 நாட்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு உருவாக்கபட்ட 156 தலைசிறந்த வீரர்களை கவுரவிக்க நடந்து கொண்டிருந்த விழாவில் திடீரென வெடித்தது வெடிகுண்டு. அதில் 57 வீரர்கள் இறக்க, அரங்கில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயமே ஃபாரன்சிக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி சமூக ஆர்வலர் சத்யஸ்வரூப் பட்டாச்சார்யா அரசாங்கத்திற்கு எதிராக உண்மையான குற்றவாளியைக் கைது செய்ய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின்போது அந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இரண்டு மந்திரிகள் தான் காரணகர்த்தா எனவும் அவர்... Continue Reading →
இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா! – Crime Novel
அன்றுதான் அனிதாவுக்கும் கீர்த்திக்கும் திருமணம் முடிந்து ரிசப்ஷன். அழையா விருந்தாளியாக கம்பெனியில் உடன் வேலை பார்த்த முருகேஷ் வந்திருந்தான். முருகேஷ்-அனிதாவை ஒருதலையாக விரும்பியவன். அனிதாவும் கீர்த்தியும் தனியாக ஒரு மாதத்திற்கு கெஸ்ட்ஹவுஸில் தங்குவதாகத் திட்டம். ஆனால், ஆபிஸ் விஷயமாக கீர்த்தி உடனே கிளம்பிவிட, இதைத் தெரிந்துகொண்ட முருகேஷ் தனியாக இருந்த அவளை பலவந்தப்படுத்த திடீரென துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டுவிடுகிறாள். ஆனால், உண்மையில் அந்தக் கொலையை அனிதா செய்யவில்லை. எப்படி..? என்பதே இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா.... Continue Reading →
தீ நிலா – Crime Novel
ஆண்களின் தவறுகளை எல்லாம் தன் எழுத்துக்களில் தெறிக்கவிடும் எழுத்தாளர் இந்துவதனாவைச் சந்திப்பதை கடைசி ஆசையாக தூக்குத்தண்டனை விக்டர் தெரிவிக்கிறான். போலீஸ், நீதிபதி என யாரிடமும் இதுவரை சொல்லாதிருந்த கொலை செய்ததற்கான காரணத்தை இந்துவிடம் சொல்லி, எப்போதும் ஆண்கள் மட்டுமே தவறு செய்வதில்லை, தவறு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி தன் வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுதக் கோருகிறான். விக்டர் விவகாரத்தில் முக்கியமாக மாஜி எம்எல்ஏ சம்பந்தப்பட்டிருக்க, அவரிடமிருந்து இந்துவிற்கு மிரட்டல் வருகிறது. அதைப் பொருட்படுத்தாத... Continue Reading →
மீண்டும் ஆகஸ்ட் 15 – Crime Novel
கடந்த இரண்டு வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட கிராமமாக மாறிவரும் புதிரான வாடாமல்லி கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ரெட்ஸ்டார் டிவியைச் சேர்ந்த நான்கு பேர் தீட்சண்யா தலைமையில் கிராமத்தை வந்தடைந்தனர். வந்த முதல் நாளே நான்குபேரில் ஒருவனான நித்தி காணாமல் போக விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. அதேநாளில் மனநலம் பாதிக்கப்பட்ட மாரம்மா என்ற பெண் கொலை செய்யப்பட, திக்கு தெரியாமல் போலீஸ் திணறுகிறது. இதற்கிடையே அமெரிக்காவிலிருந்து வாடாமல்லி கிராமத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் போலீஸ் கைக்குக் கிடைக்க அதுவே... Continue Reading →
அது ஒரு நிலாக் காலம்..! – Crime Novel
தன்னுடைய கணவர் இளங்கோவிற்கும், தன் தோழி நந்தினிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்து கொண்ட கவுசல்யா அதைத் தட்டிக்கேட்க, கோபத்தில் இளங்கோ கவுசல்யாவைத் தள்ளிவிடுகிறான். அதேவேளையில் கிடைத்த பியூன் வேலையை செய்யாமல், சினிமா சான்ஸுக்காக அலைந்துகொண்டிருந்த வேலுவின் உண்மையான சுயரூபம் விமலாவிற்குத் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவருகிறது. பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இதற்கிடையே கவுசல்யா காணாமல் போக, குடிபோதையில் சட்டையில் ரத்தக்கறையுடன் போலீசில் பிடிபடுகிறான் வேலு. ஒரே நேரத்தில் இரண்டு கணவன்-மனைவிகளின் வாழ்க்கையில் ஏற்படும்... Continue Reading →
விளக்கம் ப்ளீஸ் விவேக்..!
சந்தேகம்... சந்தேகமா...? “சந்தேகம் சாத்தானின் பல்லக்கு அற்புதம்!!! எனக்கு நம்பிக்கை இல்லை ராமசாமி!!! நம்பிக்கைதான் ஆண்டவரின் நங்கூரம் அற்புதம்!!!” இந்த வசனத்தை super delux படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால், சந்தேகமும், புறணி பேசவும் ஆரம்பித்த பிறகு தான், சிந்தனையும் அறிவும் நமக்கு வளர்ந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் பறைசாற்றுகின்றன. ஆகையால் இதெல்லாம் நம் பிறவிகுணம். 20-களில் நம் சந்தேகங்களை கூகுள் பிதா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார், நேற்றுவரை. ஆனால், 90-களில் அதாவது க்ரைம் நாவலில் விவேக் தோன்றியபின் அவரின்... Continue Reading →
இனி, மின்மினி – Crime Novel
நியூயார்க்கில் உள்ள ஒரு தம்பதியின் மகள் சில்வியா. பெரிய பெரிய டாக்டர்களினாலேயே கண்டுபிடிக்க முடியாத விசித்திரமான நோய் அந்தப் பெண்ணுக்கு. தங்களுடைய வீட்டை விற்றால் தான் சில்வியாவின் மருத்துவ செலவைப் பார்க்க முடியும் என்ற சூழலில், வீட்டை விலை கேட்டு இந்தியாவிலிருந்து வருகிறார் விஜேஷ். உண்மையில் இதற்குமுன் அந்த வீட்டை விலைபேசி அக்ரிமெண்ட் போட்ட இருவரும் ஹார்ட் அட்டாக்கினால் இறக்க, விஜேஷை ஒரு பெண் போனில் எச்சரிக்கிறாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக அனைவரும் நினைக்கும் சில்வியா, அவளுடைய... Continue Reading →
காதலுக்கு கண் இருக்கு..?! – Crime Novel
வைஷ்ணவியும் ராஜேந்திரனும் காதலர்கள். இருவரும் ஒருநாள் பீச்சில் இருந்து கிளம்பும்போது ராஜாக்கிளி என்ற ரௌடி ராஜேந்திரனை வம்பிழுக்க, பிரச்சினை போலீஸ் வரை செல்கிறது. ஆனால், அந்த வாரத்தில் ஒரு நாள் வைஷ்ணவியின் வீட்டில் கை வெட்டப்பட்ட நிலையில் ராஜாக்கிளி இறந்து கிடக்கிறான். இந்நிலையில் பணக்காரனான ராஜேந்திரனின் அப்பா அவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, கல்யாண வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. கல்யாணத்திற்குப் பத்திரிக்கை அடித்த நிலையில், ராஜேந்திரனை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொன்ன வைஷ்ணவி அவன் முன்னாலேயே சயனைட்... Continue Reading →
ஒன்றும் ஒன்றும் மூன்று – Crime Novel
சினிமா வாய்ப்புக்காக சென்னை சென்றுவிட்டு திரும்பிய கைலாஷ் வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்து அக்கம்பக்கத்தில் விசாரிக்கிறான். யாருக்கும் அவன் மனைவி தேவி எங்கே என்று தெரியவில்லை. தேவியைத் தேடிக் களைத்த கைலாஷ் உதவிக்கு போலீஸிடம் போகிறான். இதற்கிடையில் பார்சலில் ஒரு பெண்ணின் பிணம் போலீசிற்கு கிடைக்கிறது. அந்தப் பார்சலில் இருந்த பெண் தேவியோடு ஒத்துப்போக, கொலைக்கான காரணத்தை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அதே வேளையில் தேவியைப் பார்க்க வரவிருந்த அவளுடைய தோழி ஸ்வஸ்திகா திடீரென காணாமல் போகிறாள். ஸ்வஸ்திகாவின்... Continue Reading →
உலராத ரத்தம் – Crime Novel
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விவேக் தன் முழங்கையில் பிசுபிசுத்த அந்த உலராத ரத்தத்தைப் பார்த்தவாறு இருட்டில் ஆழ்ந்திருந்த பங்களாவின் பின் வராந்தாவிற்கு வந்து பாத்ரூமை நோக்கி நடந்தான். ருத்ரமூர்த்தியும் அவர் குடும்பமும் ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்த பங்களாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். வந்த முதல்நாளே அமானுஷ்யங்கள் விரட்டத் தொடங்கியிருந்தது. அழுகிய தலையற்ற உடல், பேசி நகரும் பல் இளித்த மனித தலை, புகை உருவம், பூசாரி கோர கொலை, ருத்ரமூர்த்தியின் மருமகளின் மரணம். இவையனைத்தும்... Continue Reading →
உன்னை விட்டால் யாருமில்லை – Crime Novel
முதலமைச்சர் நீலமேகம் இறந்தபின் கட்சியில் அடுத்ததாக தனக்கு பதவி கிடைக்கும் என்ற நோக்கத்துடன் அவரைக் கொல்ல சதி செய்கின்றார் கல்வி அமைச்சர் பார்த்திபராஜன். அதைத் தெரிந்துகொண்ட கட்சித் தொண்டன் கல்யாணராமனையும் கொலை செய்கின்றனர் பார்த்திபராஜனின் ஆட்கள். இந்தக் கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் கண்ணனையும் தீவைத்து எரித்து விடுகின்றனர். அடுத்ததாக சுதந்திரதின விழாவிற்கு கோட்டையில் கொடி ஏற்ற சென்ற முதலமைச்சர் நீலமேகத்தைக் கொல்ல வெடிகுண்டு வைக்க, இந்த இடத்தில் விவேக் வருகிறான். சதி முறியடிக்கப்பட்டது. ஆனால், திடீரென... Continue Reading →
திகில் ரோஜா – Crime Novel
கல்லூரித் தோழி அபிநயாவிடம் தன் அக்காவின் திருமணத்திற்குப் பண உதவி கேட்க அவள் வீட்டிற்கு வந்த விஜயாவிற்கு அந்த வீட்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது அப்போது தெரியாது. யோகா மாநாட்டிலிருந்து இரவு வந்துவிடுவாள் என்று சொல்லி அபிநயாவின் கணவன் மோகன் சொல்ல, சற்று தயக்கத்துடனேயே தங்க முடிவெடுக்கிறாள். ஆபிஸ் வேலை இருப்பதாகச் சொல்லி மோகன் வெளியேற முதலில் அவளைத் தாக்கியது, பக்கத்து அறையிலிருந்த அபிநயாவின் போட்டோவுக்கு போடப்பட்டிருந்த பூமாலை, வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த ஒரு பிணம்,... Continue Reading →
மனிதன் – Crime Novel
காரில் கிடைத்த அந்த ஆண் பிணத்தைப் பற்றி கேள்விப்பட்ட விவேக்கிற்கு விசித்திரமாக இருந்தது. உடலில் வேறெந்த ரத்தக்காயமும் இல்லை. ஆனால், அவனுடைய மார்புப்பகுதியில் ஒரு ஓட்டை போட்டு மொத்த ரத்தத்தையும் உறிஞ்சியிருந்தார்கள். இந்தப் பிணம் கிடைத்த சிறிது நேரத்தில் டாக்டர் பரமேஸ்வரன் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட, இரண்டு கேஸிலும் ஒரு நூலிழை ஒற்றுமை இருப்பதாக விவேக் உணர்ந்தான். விசாரணையில் முதலில் கொலை செய்யப்பட்ட நபர் சிதம்பரத்தைப் பற்றி ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. ரேர் ப்ளட்... Continue Reading →
Top 5 Rajeshkumar Crime Novels in Tamil
தமிழகத்தில் க்ரைம் கதைகள் என்றால் வாசகர்கள் உச்சரிப்பது "ராஜேஷ்குமார்" என்ற பெயரையே. ராஜேஷ்குமார் ஆயிரக்கணக்கில் கிரைம் கதைகளை எழுதியுள்ளார். பலரது நீண்ட தூரப் பயணம், தனிமை நேரங்கள், சுவாரஸ்ய பொழுதுபோக்கிற்கு தோழனாக இருந்தவை இந்த நாவல்கள். இதில் நான் படித்தது சிறிதளவே. ஆனால், அவற்றில் மிகுந்த சுவாரஸ்யத்தையும், வாசிப்பிற்கு பிள்ளையார் சுழி போட விரும்புபவர்களுக்கு ஏற்ற ஐந்து நாவல்கள் பற்றி இங்கே.. அதிரடி ஆட்டம் : - க்ரைம் கதைகள் பல தளங்களில் அமைத்து எழுதப்படுபவை. அதில்... Continue Reading →
விவேக் இன் டோக்கியா – Crime Novel
சிபிஐ டைரக்டர் மங்கள் பாண்டேவிடம் ரிப்போர்ட்டை ஒப்படைக்க டெல்லி சென்ற விவேக்-விஷ்ணுவிடம் ஒரு உதவி கோரினார் மங்கள் பாண்டே. மாஜி ஜட்ஜ் ஸ்வாதி சிங்கின் அதிரடி தீர்ப்புகளால் அவருக்கு அரசியல் ரீதியாக எதிரிகள் இருப்பதாகவும், அதனால் அவருடைய மகள் ஹன்ஸாவிற்கு அந்த மன அழுத்தத்தின் காரணமாக ரேர் ஹார்ட் ப்ராப்ளம் வந்திருப்பதாகவும் கூறிய பாண்டே, டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டுமே இந்த நோயை சரி செய்ய முடியும் என்பதையும் கூறினார். ஸ்வாதி சிங் மற்றும் ஹன்ஸா... Continue Reading →
விவேக் விஷ்ணு ஒரு விடுகதை – Crime Novel
தற்கொலை செய்துகொள்ளும்படி தன்னுடைய காதில் அடிக்கடி ஒரு குரல் ஒலிப்பதாகக் கூறி மனநல மருத்துவர் மணிமேகலையைச் சந்திக்க வருகிறாள் தமயந்தி. ஆனால், டாக்டரிடம் வந்துவிட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். உயிருடன் இருக்கும்போதே டி.ஐ.ஜி. பால்ராஜூக்கும் ஐஏஎஸ் ரவீந்திரனுக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை அனுப்பிய எதிரி அந்த ரிப்போர்ட்டில் இருப்பது போலவே பாம்பு கடிக்க வைத்து இருவரையும் கொலை செய்கிறான். அதேபோல் தன் பெயர் “ச ரி க ம... Continue Reading →
வென்று வா விவேக் – Crime Novel
நான் ஒரு கைதி. டெல்லி பாலிகஞ்ச் சிறை. இந்த மாதம் 17 ஆம் தேதி. விபரீதம் ஆபத்து. தடுக்கவும். உங்கள் உயர் அதிகாரிகளை மட்டும் தொடர்பு கொள்க. இதை அலட்சியப்படுத்த வேண்டாம். அந்த அதிகாலை வேளையில் ஒரு டாக்ஸி டிரைவர் கொண்டு வந்த எச்சரிக்கைக் கடிதத்தைப் படித்த விவேக் திகைத்தான். உடனே டெல்லி கிளம்பிய விவேக் அங்கிருந்த மேலதிகாரிகளை சந்தித்து, நடக்கப் போகிற விபரீதத்தைத் தடுக்க முதலில் சிறைக்கு சென்று பார்வையிட முடிவு செய்தான். சிறையில் அவர்களுக்கு... Continue Reading →
ஹாங்காங் விழிகள் – Crime Novel
பிரபல டைரக்டர் ஜெயக்கொடி தன் மகள் நிஷாவிற்கு பார்த்திருந்த ஹாங்காங் மாப்பிள்ளையின் குணநலன்களைப் பற்றி விசாரிக்க ஸ்கைவியூ டிடெக்டிவ் சரண்-வெண்ணிலாவிடம் உதவி கேட்கிறார். ஆனால், நிஷா வேறு ஒருவரைக் காதலிப்பது சரணுக்குத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் ஜமீன் பரம்பரைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட இரு வைரங்களை மறைமுகமாக வாங்க வைதேகியும் வந்தியத்தேவனும் ஹாங்காங் விரைகிறார்கள். இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்த சரண்-வெண்ணிலா அறையில் கத்திக்குத்துப் பட்ட ஒருவன் வந்து ஒரு பொருளைக் கொடுத்து அதை உரிய நபர்களிடம் சேர்ப்பிக்கச்... Continue Reading →
ஒரு நிமிஷ நிசப்தம் – Crime Novel
தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை குறைந்தது பத்து லட்சமாவது வைத்திருக்க வேண்டும் என்ற தன் அப்பாவின் கோரிக்கையைக் கேட்ட அபிநயா தன் காதலை அவரிடம் சொல்லவந்து பின் நிறுத்திக்கொண்டாள். பலமாக யோசித்த அபி ஒரு முடிவுக்கு வந்து தன் திட்டத்தை காதலன் சபரியிடம் ஒப்பித்தாள். திட்டப்படி அபியை ஒரு ஆள் கடத்தி பத்து லட்சம் பணம் கேட்டு அவள் அப்பாவை மிரட்டி பணம் வாங்குவது, சில நாட்கள் கழித்து அபியைப் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வது. அனைத்தும்... Continue Reading →
முதல் தீக்குச்சி – Crime Novel
கேள்விக்கு நடுவே முதல் தீக்குச்சி பற்றவைக்கப்பட்டது…
ஒளிந்தாலும் விடமாட்டேன் – Crime Novel
பணத்திற்கு மசியாமல், ஒழுக்கமான நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த நடிகை தாமினியைத் தன் வலையில் வீழ்த்தத் திட்டம் போட்டு அவளைத் தன் வீட்டிற்கு வரவழைக்கிறார் கலாச்சாரத் துறை அமைச்சர். அவருடைய விருப்பத்திற்கிணங்காத தாமினி அவரை எதிர்த்துப் போராடுகிறாள். இதனால் கோபமடைந்த அமைச்சரின் மூலமாக பட வாய்ப்புகளை இழக்கிறாள் தாமினி. மேலும், அமைச்சர் கொலைமுயற்சியும் செய்ய அது தோல்வியில் முடிகிறது. அமைச்சரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறாள் தாமினி. திடீரென்று ஒருநாள் ஜூவாலஜிகல் வெப்பன் மூலமாக அமைச்சர் இறந்த... Continue Reading →
தலையுதிர் பருவம் – Crime Novel
புதிதாக திருமணமான சரவணகுமாரும் மதுலிகாவும் முன்னிரவு நேரத்தில் நண்பன் ரவிஷங்கரின் கெஸ்ட் ஹவுஸ் போய்ச் சேர்ந்த போது காற்றில் சில்வண்டுகளின் சப்தம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தியது. வாட்ச்மேனும் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட ஆளரவமற்ற அந்த அத்துவானக் காட்டில் இருவரும் தனித்து விடப்பட்டனர். திடீரென இரவில் அறைக்கு வெளியே யாரோ நடக்கும் சப்தம் கேட்க திடுக்கிட்டு விழித்த மது கணவனிடம் தான் கேட்டதைக் கூற இங்கிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து டெலிபோன் இணைப்பு... Continue Reading →
அடுத்த இலக்கு – Crime Novel
அமிலத்தில் சிதைந்த ஒரு பெண்ணின் பிணம் ஹோட்டலில் கிடைத்த போது அது யாரென்று தெரியாமல் போலீஸ் திணறிக் கொண்டிருந்தது. அதே நேரம் தங்களுடைய பெண் அபூர்வாவைக் காணவில்லை என அவளுடைய அப்பாவும் அம்மாவும் பத்து நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தனர். அபூர்வமாக பிணத்தில் இருந்து கிடைத்த ஒரு தடயம் அந்தப் பெண் டிவி நடிகை நிரஞ்சனா என்று சொல்லியது. கொலைக்கான மோட்டிவ் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போலீசின் சந்தேகம் பிரபலமான மாஜி எம்எல்ஏ மீது விழுந்தது. நிரஞ்சனாவின் மரணத்திற்கான... Continue Reading →
இந்தியனாய் இரு..! – Crime Novel
“இந்த இந்தியாவில் பிறந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்ற தலைப்பில் துங்கபத்ரா பேசி முடித்த அடுத்த நிமிடம் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. கல்லூரிப் பேச்சுப்போட்டியில் அரசாங்கத்தை சாடி துங்கபத்ரா பேசிய பேச்சின் எதிரொலியாக டேனியல் என்பவன் அவளைச் சந்திக்க வந்தான். அவளும் தங்களைப் போலவே அரசாங்கத்தின் மீது தீராத கோபத்தில் இருப்பதால் தங்களுடைய இயக்கத்தில் அவளைச் சேர்க்கிறார்கள். அரசாங்கத்தை அதிரவைக்க சில விபரீதமான திட்டங்களை அவர்களுடன் சேர்ந்து துங்கபத்ரா செயல்படுத்திய அனைத்துமே புஸ்வாணமாகிப் போகிறது. இந்தியனாய் இருப்பதே வெற்றிதான்..... Continue Reading →
ரெடிமேட் சொர்க்கம் – Crime Novel
கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்த சொத்துக்களை தன்னுடைய இஷ்டப்படி பெற்றோர்கள் சிறிதும் நல்வழியில் செலவிட சம்மதிக்காததால் ஒரு கடத்தல் நாடகத் திட்டம் போடுகிறாள் பாடகி சுரபி. ரத்ததானம் செய்யப்போவதாகச் சொல்லி ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்து கிளம்பிய சுரபி, காதலன் ஹேமந்த் மற்றும் அவன் நண்பன் சையத்துடன் சேர்த்து கடத்தல் நாடகத்தைத் தொடங்க இருந்த நேரத்தில், நிஜ கடத்தல்காரர்களிடம் மாட்டிக்கொள்ள விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. கடத்தல்காரர்கள் நிர்பந்தித்த தொகையை எடுத்துச் சென்ற சுரபியின் தந்தை கொல்லப்படுகிறார். அதேபோல் அவளுடைய தாயும் கொல்லப்படுகிறாள்.... Continue Reading →
விடை சொல் விவேக் – Crime Novel
நண்பரைப் பார்க்க டெல்லிக்குச் சென்றிருந்த புரொபசர் பிரிஜேஷை சந்திக்க டெல்லி சென்றான் விவேக். காரணம் டெல்லியில் இருந்து சென்னைக்கு புரொபசருக்கு வந்திருந்த பார்சலில் விபரீதமான முறையில் இருந்த தலை முதல் கால் வரை உரித்து எடுக்கப்பட்டிருந்த மனிதத் தோல். பார்சலை டெல்லியிலிருந்து அனுப்பி வைத்தது ஒரு பெண். புரொபசர் தங்கியிருந்த வீட்டை அடைந்த விவேக்கை மேலும் திடுக்கிடச் செய்தது, கத்தியால் கொலையுண்டிருந்த ஒரு இளம்பெண். அந்த வீட்டில் புரொபசரும் இல்லை, அவரின் நண்பரும் இல்லை. பார்சலில் வந்திருந்த... Continue Reading →
அரை மில்லி மீட்டரில் ஓர் ஆபத்து..! – Crime Novel
இரண்டு வருடங்களாகியும் தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த கிருஷ்ணாவால் தன்னுடைய காதலி சந்தியாவிற்கு அரசு வேலை கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை. இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் அவனைத் தொடர்ந்து சென்று வேலைவாங்கித் தருவதாக ஒரு கம்பெனிக்கு அழைத்துச் செல்ல இங்கே இருந்து விபரீதம் ஆரம்பமாகிறது. கம்பெனியின் சட்டவிரோத காரியத்திற்கு தன்னைப் பகடைக்காயாக மாற்றப்போவதை உணர்ந்த கிருஷ்ணா உள்ளுக்குள் அதிர்ந்தான். இந்நிலையில் வாட்டர் போர்டு ஆபிசில் இருந்த முக்கியமான ஒரு ரெகார்டுக்காக கொலை நடக்கிறது.... Continue Reading →
சங்கமித்திரை – Crime Novel
இந்தியாவின் no.1 ஐ.டி.கம்பெனியில் சேர்வதற்காக இன்டர்வியூவிற்கு வந்திருந்தாள் சங்கமித்திரை. டெஸ்ட் பிரேக்கில் ரெஸ்ட்ரூம் போன அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தலையில் அடிபட்டு செத்த நிலையில் ஒரு பெண் கீழே கிடக்க, மூன்று பேர் ரத்தக்கறையுடன் நின்றிருந்தனர். நடந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் கம்பெனியின் டைரக்டர் திவாரி இருக்க, டிடெக்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சங்கமித்திரையைத் தேடி அந்தக் கம்பெனிக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு கிடைத்த தகவல் வைரக்கடத்தல் கும்பல் வரை நீள்கிறது. சங்கமித்திரை என்னவானாள்?... Continue Reading →
ஃபர்ஸ்ட் ஃப்ளைட் டூ பாரீஸ் – Crime Novel
க்ரைம் பிரான்ச் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுவதற்காக ரூபலாவுடன் பம்பாய் வந்த விவேக்குடன் ஒரு வழக்கும் தொடர்ந்து வந்துவிட்டது. கடுப்பான ரூபலாவைப் பொருட்படுத்தாமல் உயரதிகாரியை சந்திக்க சென்றான் விவேக். அடுத்த நாள் கிளம்பவிருக்கும் முதல் பாரீஸ் ஃப்ளைட்டுக்கு ஆபத்து என்று தகவல் சொல்லியது அந்த அறையில் இருந்த அனைத்து கம்ப்யூட்டர்களும். அந்த விமானத்தில் பறக்க இருந்த பிரபலமான நடிகர் சசிதரனுக்கும் நடிகை நட்சத்திராவுக்கும் விடப்பட்ட மிரட்டல் என்றெண்ணிய விவேக் அவர்களிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டு, உடனே ஒரு வியூகத்தை... Continue Reading →
இப்படிக்கு ஓர் இந்தியன் – Crime Novel
காலபைரவன் எச்சரிக்கை - சாலையில் வைக்கப்பட்டிருந்த அந்த விபரீதமான ஃபிளக்ஸ் போர்டை பார்த்த ஒருவர் போலீசிற்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் இது வெற்று மிரட்டல் என்று நினைத்த நேரத்தில் அதே போன்று இன்னொரு ரயிலில் கிடைக்கிறது. இரண்டு ஃபிளக்ஸிலும் இருந்த போன் நம்பர்களுக்கும் போன் செய்து எச்சரிக்கை செய்தது போலீஸ். ஆனால் விபரீதம் வேறு வடிவத்தில் வந்தது. வேறு கேஸ் விஷயமாக கமிஷனரைப் பார்க்கப் போன விவேக்கிற்கு இந்த ஃபிளக்ஸ் விவகாரம் தெரிய வருகிறது.... Continue Reading →
வாடகை தேவதை – Crime Novel
சமீபத்தில் நடந்த டென்னீஸ் போட்டியில் வென்று உலக அளவில் இன்று பேசப்பட்டு வரும் குந்தவை டிவி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பேட்டியை முடித்துவிட்டு திரும்புகையில் வீட்டில் ஒரு பூகம்பம் காத்திருக்கிறது என்று அவளுக்கு அப்போது தெரியாது. ராமன் நாயரும் அவரது மனைவி தங்கம்மாவும் தான் குந்தவையின் உண்மையான அப்பா அம்மா என்று சொல்லி டாக்டர் பாரிஜாதம் நர்ஸ் சுந்தரவள்ளியுடன் அவர்கள் இருவரையும் குந்தவையின் வீட்டிற்கு அழைத்து வர, அதைக் கேட்ட குந்தவையின் பெற்றோர்கள்... Continue Reading →
காதல் தேசத்துக்கு ஒரு விசா..! – Crime Novel
மிஸ் இந்தியா பட்டம் வென்ற கையோடு கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் கால் வைத்தாள் நர்த்தனா. தன்னுடைய அப்பா சொன்ன அடையாளங்களை வைத்து, புது கார் டிரைவரை அந்தக் கூட்டத்தில் தேடிக்கொண்டிருந்த போது இரண்டு ரௌடிகள் நர்த்தனாவிடம் வம்பிழுக்க, அவளைக் காப்பாற்றி வீட்டில் சேர்க்கிறான் டிரைவர் அசோக். அசோக்கின் சாதுர்யம் நர்த்தனாவிற்கு பிடித்துப் போக, அவன் விலகிச் சென்றாலும் வலிய போய் பேசுகிறாள் நர்த்தனா. இருவருக்கும் காதல் மலர, விஷயம் நர்த்தனாவின் அப்பா காதுக்கு செல்ல இங்குதான் விபரீதம் ஆரம்பமாகிறது.... Continue Reading →
நிறம் மாறும் நிஜங்கள் – Crime Novel
கல்யாணத்தைப் பிடிவாதமாக மறுக்கும் மைத்ரேயி கல்யாணம் செய்து கொண்டால்தான் சொத்துக்கள் அவள் பெயருக்கு மாறும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார் மைத்ரேயியின் அப்பா. அதற்காக போலியாக ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவெடுக்கிறாள். இந்நிலையில் மைத்ரேயியின் தோழி புவனா வேலை விஷயமாக அவள் வீட்டிற்கு வந்து தங்க, திருமணமான தன் தோழி புவனாவிடம் உதவி கேட்கிறாள் மைத்ரேயி. புவனா முதலில் மறுத்துப் பின், வரவிருக்கும் ஆபத்தை அறியாமல் தன் கணவனை மைத்ரேயியிற்குப் போலியாகத் திருமணம்... Continue Reading →
ஆபத்து இங்கே ஆரம்பம்..! – Crime Novel
விவேக் அந்த பிணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே நடந்தவற்றை அசைபோட்டான். நீலேஷின் மனைவி கஸ்தூரி வேறு ஒருவனுடன் சென்று விட, மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்த நீலேஷ் நண்பன் ரமணனின் கெஸ்ட் ஹௌசிற்கு ஓய்வெடுக்க வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இதற்கிடையில் கேஸில் விவேக்கிற்கு ஒரு முக்கியமான தடயம் கிடைக்கிறது. அதை வைத்து விசாரித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்தக் கொலைக்கான காரணம் தெரியவருகிறது. அந்தப் பெண்ணின் பிணம் யாருடையது என்பதை கிடைத்த தடயத்தின் மூலம்... Continue Reading →
முடிந்தால் உயிரோடு – Crime Novel
மாமனாருடன் சேர்ந்து வேலை செய்யாததால் சூழ்ச்சி செய்து தன்னுடைய கம்பெனியை தன்னுடைய மனைவியிடமே ஏலத்தில் இழந்துவிட்ட சோகத்தில் இருந்தான் குருப்ரசாத். இந்நிலையில் குருப்ரசாத்தை தங்கள் கம்பெனிக்கு இழுக்க முயற்சி செய்கிறாள் குருப்ரசாத்தின் மனைவி வர்ணா. பேச்சு கைகலப்பில் முடிந்து குருப்ரசாத் இறக்கிறான். குருப்ரசாத்தின் பி.ஏ ஜெயச்சந்திரனும் வர்ணாவும் சேர்ந்து அவனை கெஸ்ட் ஹௌசில் புதைக்கின்றனர். அண்ணனைத் தேடி வரும் மைதிலி அவனைக் காணாமல் விவேக்கிடம் உதவி கோர, விவேக்கால் முடிந்ததா என்பதே மீதிக்கதை. #one_minute_one_book #tamil #book... Continue Reading →
விளக்கம் ப்ளீஸ் விவேக்..!
சந்தேகம்... சந்தேகமா...? “சந்தேகம் சாத்தானின் பல்லக்கு அற்புதம்!!! எனக்கு நம்பிக்கை இல்லை ராமசாமி!!! நம்பிக்கைதான் ஆண்டவரின் நங்கூரம் அற்புதம்!!!” இந்த வசனத்தை super delux படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால், சந்தேகமும், புறணி பேசவும் ஆரம்பித்த பிறகு தான், சிந்தனையும் அறிவும் நமக்கு வளர்ந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் பறைசாற்றுகின்றன. ஆகையால் இதெல்லாம் நம் பிறவிகுணம். 20-களில் நம் சந்தேகங்களை கூகுள் பிதா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார், நேற்றுவரை. ஆனால், 90-களில் அதாவது க்ரைம் நாவலில் விவேக் தோன்றியபின் அவரின்... Continue Reading →
தீர்ப்பு – Crime Novel
மழை தாறுமாறாகப் பெய்து கொண்டிருந்த நேரத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒருவனைக் கத்தியால் குத்துவதை இருட்டில் பார்த்துவிட்டாள் சாரதாமணி. அதில் ஒருவன் தன்னிடம் படித்த மாணவன் பரமேஷ். உண்மையை வெளியே சொன்னால் அவளுடைய மகளையும் மருமகனையும் கொன்றுவிடுவதாக மிரட்டிய பரமேஷைப் பார்த்த சாரதாமணிக்கு குலை நடுங்கியது. இந்நிலையில் க்ரைம் பிரான்ச்சில் இருக்கும் தன் மருமகன் அசோக்கிடம் உண்மையைச் சொல்லமுடியாமல் தவிக்கிறாள். அதேவேளையில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நாடகமாடுகிறது போலீஸ். மேற்கொண்டு நடந்தது என்ன? #one_minute_one_book #tamil #book #review... Continue Reading →
ஒரு மதிப்பிற்குரிய குற்றம்…
கள்ளநோட்டு அடிப்பவர்களைப் பற்றி க்ரைம் பிராஞ்ச் விஜிலென்ஸ்-ஐ சேர்ந்த சத்யனுக்கு துப்பு கிடைக்க தனியாளாகச் சென்று அவர்களை மடக்க நினைத்து எதிரிகளிடம் மாட்டி உயிரிழக்கிறான். சூர்யகலாதரன் தன்னுடைய நண்பன் சத்யனின் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய தங்கை தாரிகாவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். மூன்றாவதாக சூர்யகலாதரனின் மற்றொரு நண்பன் பிரதாப்பும் கொலை செய்யப்பட, இந்த இடத்தில் போலீசுக்கு கொலையில் ஒரு தடயம் கிடைக்கிறது. குற்றத்தை மதிப்பிற்குரிய விஷயமாகக் கருதும் எதிரிகள் யார்? கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டதா?... Continue Reading →
வெள்ளை நிழல்! – Crime Novel
ஈஸ்வரி தன்னுடைய அப்பாவிடம் தன் காதலைப் பற்றியும் கிரிதர் பற்றியும் கூற வெகுண்ட கோபாலகிருஷ்ணன், கிரிதரை நேரில் சந்திக்க வரச் சொல்கிறார். அவனுடைய அந்தஸ்தை முன்னிறுத்தி அவனை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார் ஈஸ்வரியின் அப்பா. அவரை விட ஒருபடி மேலே வந்தபிறகு தான் இருவருக்கும் திருமணம் என்று முடிவெடுத்த அவன் அயராது உழைத்து முன்னேறுகிறான். கல்யாணம் ஈஸ்வரி அப்பாவின் சம்மதத்துடன் சிம்பிளாக நடக்க, ஒரு வாரத்திலேயே அவளை விட்டு தனியாக மெட்ராஸ் செல்கிறான். திடீரென ஒருநாள் ஈஸ்வரி... Continue Reading →
2000 சதுர அடி சொர்க்கம் – Crime Novel
மிஸ்டர் டிஸ்ஸாஸ்டர் என்று வான இயல் வல்லுனர்களால் வர்ணிக்கப்பட்ட வால்நட்சத்திரத்தைப் பற்றி ஸ்பேஸ் ரிசர்ச் சென்டரின் ரிடையர்ட் டைரக்டர் ரவிசங்கரிடம் விசாரிக்க வருகிறாள் டாக்டர் வாணி சுந்தர். விபரீத வால்நட்சத்திரம் கடினமான உப்புக்களாலும் தாதுக்களாலும் உருவாக்கப்பட்டிருக்கும் வால்நட்சத்திரம் பூமியை உரசிச் செல்வதால் ஓசோனில் ஓட்டை உண்டாக்கி அதன் துகள்கள் பூமியின் மேற்பரப்பில் விழ வாய்ப்புள்ளதாகவும் முழுவதுமாக விவரித்தார் ரவிசங்கர். அடுத்ததாக அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன அவர் வந்திருப்பது டாக்டர் இல்லை என்பதை உணர்ந்தார். மேலும்,... Continue Reading →
1+1=0 – Crime Novel
‘வளையோசை’ பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பதற்காக பத்திரிக்கையின் சீஃப் சப்போர்ட்டர் சுடர்கொடிக்காகக் காத்திருந்த விவேக்கிற்கு வந்து சேர்ந்தது அந்த திடுக்கிடும் செய்தி. வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் மர்ம நபர் ஒருவரால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தாள், சுடர்கொடி. ஸ்பாட்டிற்கு விரைந்த விவேக்கின் கையில் கிடைத்தது முக்கியத் தடயமான சுடர்கொடியின் டயரி. மேலும், சுடர்கொடியின் வீட்டை சோதனையிடச் சென்றபோது அவளுடைய அண்ணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்க, அவளுடைய வீட்டில் கிடைத்த பொருள்கள் விவேக்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், விவேக்கிற்கு உதவிசெய்ய முன்வருகிறாள் சுடர்கொடியின்... Continue Reading →
ஒன்பதாவது திசை – Crime Novel
“ககாசல டபை தர பவறர் கச சன்டன ததி பகீறழே கபசத்டத படிறஆ கழ சம். டஒ தருபஅறமா கவாசசை டயிதல் பதோறண் கடி சனாடல் தசொபர் றண கசுசர டங்தக பம்ற..” இறக்கும் வேளையில் தன்னுடைய தந்தை தன்னிடம் சொன்ன அந்த ஒன்பதாவது திசை ஓலைச்சுவடி ஆறு மாதத்திற்கு பிறகு பூவிழி கையில் சிக்கியது. அதை எடுத்துக்கொண்ட அவள் ஓலைச்சுவடியை ஆராய்ச்சி செய்யும் நண்பன் சம்பத்தை சந்திக்க சித்தர் காடு விரைந்தாள். ஸ்டேஷனில் இருந்த கருப்பு... Continue Reading →
உயிர் உருகும் சத்தம்..! – Crime Novel
பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்துவந்த ரூபனும் வானதியும் ‘மரணம் பார்க்காத வீடு’ பற்றி கேள்விப்பட்ட உடனே பேட்டி எடுக்க திண்டலில் இருந்த அந்த கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அந்த நிமிடம் மரணம் பார்க்காத வீடு அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. சாகும் நிலையில் உள்ள ஒருவர் அந்த வீட்டில் இருக்கும் வரையில் அவரது உயிர் உடலை விட்டு வெளியே போகாது. மேலும் அந்த வீட்டில் உள்ள மாமரம் மற்றும் தென்னை மரத்தில் வருடத்திற்கு ஒரே ஒரு காய்... Continue Reading →
ஒரு மரணத்தின் மரணம் – Crime Novel
பிளாசிபோ..உயிர்காக்கும் மாமருந்து. உலகிலேயே இந்தியாவில் அதுவும் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள ‘வஜ்ராலு கொண்டா’ கல் க்வாரியில் இருப்பதை அறிந்த கிரணும் தாரகையும் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் புரொபசர் ஜெயப்ரகாஷைப் பேட்டி எடுக்க விரைந்தனர். செவ்வாய் கிரகத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய பிளாசிபோ இந்தியாவிற்கு எப்படி வந்தது என்பதை அறிந்த கிரண்-தாரகை வியப்பின் உச்சிக்கே சென்றனர். வெளிநாட்டினர் பலர் வஜ்ராலு கொண்டா பகுதிக்கு வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்ப இந்திய அரசாங்கம் அதை மறுத்துவிட்டது. மேலும், பிளாசிபோவைத் தனியாக... Continue Reading →
அருந்ததியும் ஆறு தோட்டாக்களும் – Crime Novel
அந்தக் காலை வேளையிலேயே இண்டஸ்ட்ரியலிஸ்ட் திருஞானத்தை சந்திக்க இன்ஸ்பெக்டர் தமிழரசன் வந்திருந்தார். அவருடன் விபரீதமும் கூட வந்திருந்தது. அவர் கொண்டுவந்திருந்த அந்த அபாயகரமான பொருள் அருந்ததி என்று பெயர் பொறிக்கப்பட்ட ஆறு துப்பாக்கி தோட்டாக்கள். அந்த வகையான தோட்டாக்கள் கோயம்புத்தூரிலேயே திருஞானம் மற்றும் அவருடைய மகன் மதன் இருவரிடம் மட்டுமே இருந்தது. மதனிடம் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அவன் பொய் சொல்வதை அவனுடைய பேச்சிலிருந்தே உணர்ந்தார். மேலும் மேலும் பொய் மட்டுமே பேசிக்கொண்டிருந்த மதன் திடீரென போலீஸ்... Continue Reading →
எவன் அவன் – Crime Novel
தன்னுடைய மேலதிகாரியிடமிருந்து வாட்ஸ்அப்பில் அந்தத் தகவல் வந்தபோது சற்று அதிர்ந்துதான் போனான் விவேக். ஸ்தலத்திற்கு சென்ற விவேக்கிற்கு கிடைத்த தகவல்கள் மேலும் திடுக்கிட செய்தது. தனக்கான சவப்பெட்டியை சாவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஆர்டர் செய்திருந்தார் தேவசகாயம். விவேக்கின் விசாரணை முதலில் சவப்பெட்டி தயாரித்தவனிடமிருந்து ஆரம்பிக்க முதல் பார்வையிலேயே அவனிடம் தப்பு இருப்பதைக் கண்டுபிடித்தான். அவனைத் தீர விசாரித்ததில் டிவைன் கிரிஸ்டோ மற்றும் விவித் பிங்கி பற்றிய திடுக்கிடும் பல விஷயங்கள் வெளியே வர அதிர்ச்சியின் உச்சிக்கே... Continue Reading →