தங்கை கதம்பாவின் திருமண விஷயமாக அப்பாவுடன் மதுரை செல்கிறாள் கிருஷ்ணகுமாரின் மனைவி லதிகா. வக்கீலான கிருஷ்ணகுமார் கேஸ் விஷயமாக பெங்களுர் செல்ல இருந்த நிலையில் அவனுடைய பெங்களூர் நண்பன் சிவாவிடம் இருந்து போன் வருகிறது. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகுமாரை சந்திக்க சென்னை வந்திருந்தான் சிவா. உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் காட்சி அளித்த சிவாவைப் பார்த்த கிருஷ்ணகுமார் அதிர்ந்தான். தன்னுடைய மனைவி புனிதாவின் நடத்தை சரி இல்லாததால் விவாகரத்து கேட்டு வந்திருந்தான் சிவா. பெஸ்ட் தம்பதிகள் என்று... Continue Reading →
ஊதா நிற தேவதை – Crime Novel
சாயந்திர நேரம்.. மழையில் சொட்ட சொட்ட நனைந்து ரோட்டில் நின்று கொண்டிருந்தாள் ஹரிணி. அவளுடைய அழகில் மயங்கிய காந்தன் அவளுக்கு உதவி செய்வதுபோல் அருகில் காரை கொண்டு வந்து நிறுத்தினான். தன்னுடைய பெயரை மாற்றிக் கூறிய ஹரிணி அவனுடன் காரில் ஏறிக்கொள்கிறாள். அந்த நாளில் இருந்து காந்தன் காணாமல் போகிறான். இன்னும் இருபது நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன தன்னுடைய மகள் பவித்ராவைத் தேடித் தருமாறு கமிஷனரிடம் உதவி கேட்கிறார் பெருமாள் நம்பி.... Continue Reading →
ஆகஸ்ட் அதிர்ச்சி – Crime Novel
மோகன்ராஜின் ஒரே மகளான கோடீஸ்வரியான சில்பா தன்னுடைய ஸ்டேட்டஸிற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத விக்னேஷைக் காதலிக்கும் விஷயம் அவருக்குத் தெரிய வருகிறது. மேற்கொண்டு தன் மகள் சில்பா அவனுடன் பழகாமல் இருக்க விக்னேஷைக் கொலை செய்ய திட்டம் போடுகிறார் மோகன்ராஜ். தன்னுடைய பிஏ விஜயராகவனை வைத்து விக்னேஷை சுட்டுக் கொல்கிறார் மோகன்ராஜ். விக்னேஷின் உடலை மில்லுக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசிடம் பிடிபடுகின்றனர். எப்படியோ இன்ஸ்பெக்டரிடம் பேரம் பேசி பிணத்தை இருவருமாக சேர்ந்து மில்லில் உள்ள... Continue Reading →
விலையாக ஒரு கொலை – Crime Novel
தன்னுடைய ஒரே மகளான அனுவிற்குத் திருமணம் செய்துவைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார் செல்வகிருஷ்ணன். கூடவே அனுவின் சித்தியான சரளாவும் தன்னுடைய கணவனிடம் அனுவின் திருமணத்திற்காக நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அனுவோ மோகனைத் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தாள். அனுவின் வீட்டிற்கு நேர் எதிரில் குடியிருந்தான் முரளி. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்த தன்னுடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டவன். சான்ஸுக்காக நிறைய டைரக்டர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தான் முரளி. அனுவின் அப்பா இரவு அவசர வேலையாக கம்பனிக்கு சென்றிருந்ததால், அவளுடைய... Continue Reading →
நான் ஏன் இறந்தேன் – Crime Novel
பேசியபடி வரதட்சணை பணத்தைக் கொடுக்கத் தாமதமானதால் பைரவியை மணவறைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் மாப்பிள்ளை சசியின் அப்பா சிகாமணி. பைரவியின் அப்பா ராமலிங்கம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலனில்லாமல் போகிறது. ஒருவழியாக ராமலிங்கம் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேர, திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள் பைரவி. பைரவியின் மறுப்பை எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார் மணமேடையில் நின்று போன கல்யாணம் நடந்ததாக சரித்திரம் இல்லை என்று கோபத்தில் அவளைக் கறுவிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அதே நேரத்தில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்து... Continue Reading →
ஒரு லட்சம் வினாடிகள் – Crime Novel
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன தன்னுடைய மகள் பூமொழியின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காக அம்பாள் அடிமை ஜோசியரிடம் ஆலோசனை கேட்கிறார் பைரவமூர்த்தி. அவர்களின் குடும்ப ஜோதிடர் சோழிகளை உருட்டிப் பார்க்கிறார். இப்போதிருந்து மிகச் சரியாக ஒரு லட்சம் வினாடிகளுக்குள் பூமொழியைக் கண்டுபிடித்து அவளை இந்த வீட்டிற்கு கூட்டி வந்தால் அவர்கள் இருவரையும் பிரித்துவிடலாம். குறிப்பிட்ட இந்த நேரத்தைத் தாண்டிவிட்டால் இனி பூமொழி நமக்கு கிடைக்க மாட்டாள் என்று சொல்கிறார் அம்பாள் அடிமை. பூமொழியின் இரண்டு அண்ணன்களும் அவளை ஊர்... Continue Reading →
ஒரு பௌர்ணமி மரணம் – Crime Novel
அன்றைய தினம் திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நின்றுகொண்டிருந்தனர் ஜெயந்த்-சுப்ரியா தம்பதியினர். ரிசப்ஷனுக்கு வந்திருந்த ஜெயந்தின் நண்பன் மனோஜ் தேனிலவிற்காக புதுமணத் தம்பதியரை தன்னுடைய கெஸ்ட் ஹவுஸிற்கு அழைக்கிறான். ஜெயந்தும் சுப்ரியாவும் ஊட்டியில் உள்ள மனோஜின் ஜண்டேவாலா எஸ்டேட்டிற்குச் சென்றபோது மனோஜ் வேலை விஷயமாக வெளியூர் கிளம்பிக்கொண்டிருந்தான். எஸ்டேட் மேனேஜர் விஜய்யிடம் ஜெயந்த்-சுப்ரியாவிற்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு கூறிவிட்டு கிளம்பிவிடுகிறான் மனோஜ். அங்கு வந்த விஜயைப் பார்த்த சுப்ரியா திடுக்கிட்டாள். காலேஜில் தன்னைக் காதலிப்பதாகக் கூறி தன்... Continue Reading →
போகப் போகத் தெரியும் – Crime Novel
சொந்த கிராமமான தாழையூருக்கு நண்பன் ரவிச்சந்திரனையும் விடுமுறைக்கு அழைத்துச் செல்கிறான் விநோத். தாழையூரில் உள்ள விநோத்தின் மாமா சோமநாத குருக்கள் வீட்டிற்கு இருவரும் செல்கின்றனர். கிராமத்திற்குச் செல்லும் கடைசி பஸ்ஸையும் தவறவிட்ட இருவரும் டாக்ஸியில் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கின்றனர். அப்போது அதே டாக்ஸியில் உடன் வந்த பெரியவர் தாழையூரைப் பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறுகிறார். இரவு நேரங்களில் வழியில் உள்ள ஆற்றங்கரை கோவில் அருகில் காத்து கறுப்பு நடமாட்டம் இருப்பதை பெரியவரின் மூலம் அறிகின்றனர். நிறைவேறாத... Continue Reading →
சத்யாவின் சபதம் – Crime Novel
பத்ரியும் வகுளாவும் முகநூல் நண்பர்கள். இரண்டு வருடங்களாக முகநூலில் மட்டுமே பேசி வந்த பத்ரி திடீர் சர்ப்ரைஸாக வகுளாவை சந்திக்க நேரில் வருகிறான். இதை சற்றும் எதிர்பாராத வகுளா அதிர்ச்சி அடைந்து பின் சந்தோஷமடைகிறாள். பத்ரி வீட்டிற்கு வந்த நேரம் சாயங்கால வேளை, அதுமட்டுமில்லாமல் அவன் வீட்டிற்கு வந்த போது அவள் மட்டுமே தனியாக வீட்டில் இருந்தாள். மேலும் வகுளாவின் அண்ணா நவீன் இரவு 8 மணிக்கு தான் வீட்டிற்கு வருவான். பேசிக்கொண்டே இருந்த பத்ரி அவளை... Continue Reading →
கறுப்பு வானவில் – Crime Novel
தந்தையை இழந்த அரவிந்துக்கு கல்யாண வயதில் ஒரு அக்காவும், இரண்டு தங்கைகளும் இருக்க, குடும்பத்தில் வருமானம் இல்லாததால் அக்கா ரேணுகாவின் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு வருடங்களாக வேலை தேடி சலித்துப் போன அரவிந்த் அன்றைய தினம் இன்டர்வியூவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். பிரபலமான கங்கா கௌரி கம்பெனியில் இன்டர்வியூ. அவநம்பிக்கையுடன் இன்டர்வியூ கிளம்பிய அவனுக்கு எதிர்பாராத விதமாக அந்தக் கம்பெனியில் வேலை கிடைக்கிறது, கூடவே விபரீதமான ஒரு கோரிக்கையுடன். தன்னுடைய மகள் தேன்மொழியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த... Continue Reading →
அருகில் ஒரு நரகம் – Crime Novel
தன்னுடைய தம்பி சத்தியமூர்த்தியின் தற்கொலைக்குக் காரணமான அகிலாவையும் அவளுடைய கணவன் யோகேஸ்வரனையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறான் பரமேஷ். கூட்டாளிகளுடன் சேர்ந்து அகிலா-யோகேஸ்வரன் வரவிருக்கும் வழியில் சாலையில் காத்திருக்கின்றனர் பரமேஷும் அவனுடைய நண்பர்களும். சத்தியமூர்த்தியைக் காதலித்துக்கொண்டிருந்த அகிலா, பணக்காரனான யோகேஸ்வரன் கிடைக்கவும் அவனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். அகிலா கிடைக்காத காரணத்தால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான் சத்தியமூர்த்தி. மழைத் தூறல் அப்போது தான் ஆரம்பித்திருந்தது. அதே வேளையில் கிரைம் பிரான்ச் ஆபீஸரான அசோக் நிறைமாத... Continue Reading →
நயாகரா புயல் – Crime Novel
நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக விவேக்-ரூபலா இருவரும் கனடாவில் உள்ள விண்ட்ஸர் சிட்டி ஏர்போர்ட்டிற்கு வருகின்றனர். அவர்களை ரிஸீவ் பண்ணுவதற்காக விவேக்கின் நண்பன் தமிழ்மணி ஏர்போர்ட்டில் காத்திருக்கிறான். விவேக் ஏர்போர்ட்டில் காலடி எடுத்து வைத்த நேரம் அவனுக்காக ஒரு கேஸ் கனடாவில் காத்துக்கொண்டிருந்தது. மூவரும் காரில் பயணித்துக்கொண்டிருக்க வழியில் ஒரு ஃபாதர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்றி ஹாஸ்பிடலைஸ் பண்ணுவதற்குள் அவர் உயிரிழக்கிறார். போலீஸ் விசாரணையில் இறந்த நபர் ஃபாதர் இல்லை என்பதும், அவன் தேடப்பட்டு வரும் தூக்குத்தண்டனைக்... Continue Reading →
வளைவுகள் அபாயம் – Crime Novel
தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டி வருவதாகச் சொல்லி சத்யேஷிடம் உதவி கேட்டு வருகிறாள் சுகிர்தா. சத்யேஷ் தற்காப்புக் கலை நிபுணன். மேலும் சிறுவர்களுக்கான தற்காப்பு பயிற்சி மையத்தை நடத்தி வருபவன். சூரத் சத்யேஷின் உதவியாளன். தன்னுடைய பயிற்சி மையத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உதவ மறுத்துவிடுகிறான் சத்யேஷ். ஆனால் சுகிர்தா அவனை சந்தித்து விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே சத்யேஷிற்கு ஒரு மிரட்டல் பேர்வழி போன் செய்கிறான். சுகிர்தா விஷயத்தில் ஒதுங்கி இருக்குமாறு சத்யேஷை மிரட்டுகிறான்... Continue Reading →
ஜூன், ஜூலை, ஆ… – Crime Novel
சாரதாவின் வீட்டில் இருந்து கிளம்பிய மருதநாயகம் இரவு பத்தரை மணிக்கு வீட்டை அடைந்தார். வாசலிலேயே அவருடைய மனைவி ஜானகி கோபத்தில் காத்திருந்தாள். சாரதாவின் மேல் உள்ள ஆசையால் அவளுக்கு பங்களா வாங்கிக் கொடுத்து தனியாக வைத்திருந்தார் மருதநாயகம். அன்றைக்கு சாயந்திரம் ஜானகியின் உத்தரவின் பேரில் இருவரும் படத்திற்குச் செல்ல இருந்தனர். அதனால் அன்று சாரதாவை சந்திக்க வர முடியாததை முன்னமே அவளிடம் சொல்லிவிட்டார். திடீரென எதிர்வீட்டுப் பெண் ஜானகியை மாங்கல்ய பூஜைக்கு அழைத்துவிட்டுச் செல்ல அங்கு செல்ல... Continue Reading →
இது தப்பிக்கும் வேளை – Crime Novel
பிரபல சினிமா நடிகையான கார்த்திஜாவைப் பெண் கேட்டு வருகிறான் சிங்கப்பூரின் கோடீஸ்வரர்களில் ஒருவனான மதன். ஆரம்பத்தில் திருமணத்திற்கு யோசித்த அவள் பிறகு மதனுக்கு ஒரு கண்டிஷன் போடுகிறாள். திருமணத்திற்குப் பிறகு கார்த்திஜாவின் சொத்துக்களை மதன் எதிர்பார்க்கக் கூடாது என்பதே அந்த கண்டிஷன். கார்த்திஜாவின் கண்டிஷனுக்கு ஒத்துக்கொள்கிறான் மதன். இந்நிலையில் மதனைப் பற்றிய மோசமான விஷயங்களுடன் ஒரு கடிதம் கார்த்திஜாவின் வீட்டிற்கு வருகிறது. மதன் ஊரில் உள்ள அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்பவன் என்பதைப் படித்த அவள் அதிர்ந்தாள். மேற்கொண்டு... Continue Reading →
சொர்க்கத்தின் சாவி – Crime Novel
பாகிஸ்தானின் கராச்சியில் நடக்கவிருந்த கல்ச்சுரல் ப்ரோக்ராம்மில் பங்கேற்க ஒரு மாதம் இருந்த நிலையில் தயாராகிக்கொண்டிருந்தாள் பிரபல டான்சரான சமுத்திரா. அவளை சந்திக்க ஒரு கடிதத்துடன் வருகிறார் அசிஸ்டண்ட் கமிஷனர் வகுளாம்பரன். அந்தக் கடிதத்தில் சமுத்திரா கல்ச்சுரல் ப்ரோகிராம்மை புறக்கணிக்க வேண்டுமெனவும், மீறி கராச்சி சென்றால் இரண்டு கால்களையும் இழக்க நேரிடும் என லிட்டில் டெவில்ஸ் என்ற தீவிரவாத அமைப்பு அவளை எச்சரித்திருந்தது. மிரட்டல் கடிதத்தைப் பொருட்படுத்தாமல் ப்ரோக்ராம்மில் கலந்துகொள்வதில் உறுதியாக இருந்தாள் சமுத்திரா. தக்க ஏற்பாடுகளுடன் பாதுகாப்பாக... Continue Reading →
உயிரின் ஒலி – Crime Novel
பரமானந்த ரிஷியின் தீவிர பக்தனான தமிழ்ச்செல்வன் தனது மனைவி வைஷ்ணவியுடன் ரிஷிகளின் ஆசிரமத்திற்குச் சென்றுகொண்டிருந்தான். ஆசிரமத்திற்குள் நுழையும் முன் இயற்கை உபாதை அதிகரிக்க ஒரு பெரிய பாறையின் மறைவில் ஒதுங்கினான் தமிழ்ச்செல்வன். பாறைக்குப் பின்னால் இருந்து இருவர் கிசுகிசுப்பாக பரமானந்த ரிஷிகளைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டிருந்தது இவனுடைய காதில் விழுந்தது. உச்சகட்ட கோபமடைந்த தமிழ்ச்செல்வன் அவர்களை உலுக்கி எடுக்க, பேசிக்கொண்டிருந்த இருவரும் பரமானந்த ரிஷிகளின் சீடர்கள் என்பது தாமதமாக தமிழ்ச்செல்வனுக்குப் புரிகிறது. இரண்டு சீடர்களிடம் இருந்து பரமானந்த... Continue Reading →
அபயம்…அபாயம்..அருணா.! – Crime Novel
விவேக் ஸ்தலத்திற்குச் சென்ற போது கரிக்கட்டையாய் மாறி புகைந்து கொண்டிருந்தான் கல்லூரி மாணவன் எழில் செல்வன். போதையின் உச்சத்தில் இருந்த எழில் செல்வன் போதை தலைக்கேறி ட்ரான்ஸ்பார்மரில் ஏறியதில் ஷாக் அடித்து மரணம். சிட்டியில் கல்லூரி மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தால் இப்படிப்பட்ட அசாதாரண மரணங்கள் அதிகரிப்பது வழக்கமாகி இருந்தது. கல்லூரி மாணவர்களிடம் விசாரித்ததில் போதை மருந்து விற்பனையில் முக்கிய மந்திரி சம்பந்தப்பட்டிருப்பதை விவேக் அறிகிறான். விவேக் விசாரித்துக்கொண்டிருந்த நேரத்தில், மந்திரி அடைக்கலராஜ் தன்னுடைய டாக்டர்... Continue Reading →
இந்தியன் என்பது என் பேரு – Crime Novel
ஹாங்காங்கில் வேலை செய்யும் அண்ணன் தருணை சந்திக்க ஏர்போர்ட் வந்திறங்குகிறாள் அட்சதா. வருடத்திற்கு ஒருமுறை வந்து இரண்டு வாரம் தங்கிவிட்டு செல்வது அவளது வழக்கம். இந்த முறை அவள் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் மெலன் லீ என்ற சீனப் பெண் அவளாகவே வந்து அறிமுகம் செய்து கொண்டு காஃபி ஷாப்பிற்கு அட்சதாவை அழைக்கிறாள். அட்சதா மிகவும் அழகாக இருப்பதாகவும் இந்தியர்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறுகிறாள். மெலன் லீயை நம்பி காஃபி ஷாப் செல்கிறாள் அட்சதா. அங்கு... Continue Reading →
இன்று இறப்பு விழா – Crime Novel
லண்டனில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பம்பாய் வந்தடைகின்றனர் ஒலிம்பிக் வீரர்கள். பம்பாயில் தங்கியிருந்து மீதிப் பயிற்சியையும் முடித்துக் கொண்டு அங்கிருந்து லண்டன் செல்வதாகத் திட்டம். ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பூபேஷ் அனைவரையும் ஹோட்டல் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் பம்பாய் வந்த உடனேயே ஒரு சம்பவம். ஹாக்கி கேப்டனான உத்தமும் கோச் குருதேவ் சிங்கும் போய்க்கொண்டிருந்த காரில் திடீரென குண்டு வெடித்து பீஸ் பீஸாக சிதறினர். குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பற்றி போலீஸ்... Continue Reading →
அவள் ஒரு ஆச்சரியக்குறி – Crime Novel
கல்லூரிக்குச் சென்ற வனிதா ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து வழக்கமான நேரத்தைத் தாண்டியும் வீடு வந்து சேரவில்லை. பயந்த அவளுடைய அப்பா ராமநாதன் பஸ் ஸ்டாப்பிற்குச் சென்று வனிதாவிற்காகக் காத்திருக்கிறார். நேரம் தான் போய்க்கொண்டிருந்ததே தவிர எந்த பஸ்ஸிலும் வனிதா வரவில்லை. கடைசி பஸ்ஸும் போய்விட, பதற்றத்துடன் வீடு திரும்பிய ராமநாதன் மனைவி சாவித்திரியிடம் சொல்லிவிட்டு, வனிதாவின் தோழி மாலதி வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். மாலதி சொன்ன தகவல் ராமநாதனை திடுக்கிட வைக்கிறது. வனிதா ஸ்பெஷல் கிளாஸிற்கே அன்று... Continue Reading →
ஒரு கால் சுவடு தொடர்கிறது – Crime Novel
ஐந்து மாதங்களுக்குப் பிறகு அன்றைக்குத் தான் சிங்கப்பூரில் உள்ள அத்தை வீட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறாள் ராகினி. ஏர்போர்ட்டில் அவளுடைய அப்பா ஜகதீஸ்வரனைத் தேட, அவர் அவள் கண்ணில் சிக்கவில்லை. மேற்கொண்டு அப்பாவிற்காக காத்திருக்காமல் டாக்ஸி பிடித்து வீட்டிற்குச் செல்கிறாள் ராகினி. வீட்டிற்குப் போகும் வழியிலேயே ரோட்டில் கூட்டம் கூடியிருக்க அவளுக்கு பழக்கமான அம்பாசடர் கார் நடுரோட்டில் நிற்க காரைச் சுற்றிலும் ஒரே நெரிசல். காரை நோக்கிச் சென்ற ராகினி அதிர்ந்தாள். அங்கே காரில் ஏராளமான கத்திக்குத்துகளுடன்... Continue Reading →
இந்த ரோஜாவுக்கு நிறமில்லை – Crime Novel
போலீஸ் வேலையை விட்டுவிடுமாறு ப்ரதீபாவை சில நாட்களாகவே வற்புறுத்திக் கொண்டிருந்தான் அவளது கணவன் மகேஷ். முதன்முதலில் பஸ்ஸில் ரவுடிகளை தைரியமாக எதிர்த்து நின்ற ப்ரதீபாவின் துணிச்சலை தான் முதலில் விரும்பினான் மகேஷ். வீட்டில் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லிய மகேஷ் ஆரவாரமாக குடும்பத்தினருடன் ப்ரதீபாவின் வீட்டுக்கு பெண் பார்க்க வந்தான். வீட்டில் ப்ரதீபா இல்லை. மேலும் ப்ரதீபா போலீஸ் என்ற உண்மை தெரிந்ததும் வந்தவர்கள் அப்படியே திரும்பிச் சென்றனர். பெண்கள் போலீஸ் வேலைக்கு செல்வதை விரும்பாத மகேஷின் ஆர்த்தடாக்ஸ்... Continue Reading →
இந்திய நாடு என் வீடு – Crime Novel
இந்திய ராணுவ ரெஜிமென்டில் அந்நிய நாட்டுத் தீவிரவாதிகள் சதி செய்ய இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து மேஜர் காசிநாத்திற்கு ரகசியத் தகவல் வந்து சேர்கிறது. தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுத்து ரெஜிமென்ட்டைப் பாதுகாக்க உயரதிகாரிகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டுகிறார் மேஜர். அந்தக் கூட்டமே அந்த ரெஜிமெண்ட்டில் இருந்த தருணின் மேல் சந்தேகப்பட்டு அவனுடைய ரியாக்ஷனைச் சோதிப்பதற்குத் தான். அன்றைக்கு மனைவியுடன் ஷாப்பிங் சென்றிருந்த தருணைப் பற்றி எல்லாத் தகவல்களும் அறிந்த ஒருவன் தருணிடம் தனியாகப் பேசுவதற்காக அழைக்கிறான். மனைவியை... Continue Reading →
உயிரின் உயிரே – Crime Novel
காபரே டான்சர்களைத் தீவிரமாக வெறுக்கும் மனநோயாளியான ஹரி, தனியார் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்கிறான். மருத்துவமனை பேர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக டாக்டர் வேணுகோபால் ஹரி காணாமல் போன இரவே விஷயத்தைப் போலீசிடம் கொண்டு போகாமல் லேசர் டிடெக்ட்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்த நரேனிடம் உதவி கோருகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அடுத்த நாளே தாரா ஹோட்டலில் காபரே டான்சரான தீபிகா கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். தீபிகாவும் அதே ஹோட்டலில் மேனேஜராக இருந்த சங்கீத்தும்... Continue Reading →
கறுப்பு ரத்தம் – Crime Novel
சேவியரும் லாரன்ஸும் அவசர அவசரமாக குணசீலியை பிக் அப் செய்வதற்காக ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தனர். ஒரு மாத கல்லூரி விடுமுறைக்காக சென்னையில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தாள் குணசீலி. ட்ரெயின் அப்போது தான் ஸ்டேஷன் வந்தடைகிறது. குணசீலி அவளுடைய கம்பார்ட்மெண்ட்டில் இருந்து இறங்காததால், இருவரும் ரயிலுக்குள்ளே சென்று பார்க்கிறார்கள். அங்கே குணசீலியின் பொருட்கள் மட்டும் பெர்த்தில் இருக்க அவளைக் காணவில்லை. ரயில் முழுவதும் தேடிவிட்டு கடைசியாக பாத்ரூம் பூட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்த சேவியர், கதவைத் தட்ட உள்ளே இருந்து... Continue Reading →
என் இனிய விரோதியே – Crime Novel
கெமிஸ்ட்ரி கோல்ட் மெடலிஸ்ட்டான கல்யாண் அன்று இன்டெர்வியூவிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். கல்யாணின் அப்பா இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜின் கல்லூரி நண்பர்களான கமலசேகர் & சிவராமின் பெர்டிலைசர் கம்பெனி அது. எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற சந்தோசத்தில் கிளம்பிய கல்யாண் வழியில் அவனுடைய காதலி வந்தனாவை சந்தித்துவிட்டுச் செல்கிறான். கல்யாண் இன்டெர்வியூவிற்குச் செல்லும் அதே பெர்டிலைசர் கம்பெனியில் தான் வந்தனாவின் தோழி சுதந்திராவும் ரிஷப்ஷனிட்டாக வேலை பார்க்கிறாள். கம்பெனியின் பிரம்மாண்டத்தை ரசித்துக்கொண்டே வந்த அவன், சுதந்திராவிடம் இன்டெர்வியூ பற்றிய தகவல்களைத்... Continue Reading →
நீல நிலா – Crime Novel
காணாதது கண்டான் கோட்டை..?! சுட்டெரிக்கும் வெயிலிலும் இருண்டு கிடைக்கும் காணாதது கண்டான் கோட்டை. பௌர்ணமி நாளன்று மட்டும் நீல நிறத்தில் ஒளிர்கிறது. அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன..? அன்று.. அந்த மர்மத்தை ஆராய தொல்லியல் துறை தலைவர் பத்ரிநாராயணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு வேனில் விரைந்து கொண்டிருந்தது. அடர்ந்த காட்டிற்குள் இருந்த அந்தக் கோட்டையை அடைவதற்குள் இருட்டிவிட, இரவு வனத்துறை செக்போஸ்ட் அருகிலேயே டென்ட் போட்டு தங்க முடிவு செய்கின்றனர். அப்போது அங்கு... Continue Reading →
இறந்து கிடந்த தென்றல் – Crime Novel
சென்னையில் இருந்து சொந்த ஊரான கோவைக்கு சொந்த வேலையாக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தான் ரிப்போர்ட்டரான குமரன். வழியில் ரயில்வே கேட் போடப்பட்டிருந்ததால், இயற்கை உபாதைக்காக பஸ்ஸை விட்டு இறங்கி ஒதுக்குப்புறமாகப் பார்த்து ஒதுங்குகிறான். திடீரென காலில் ஏதோ தட்டுப்பட, அரைகுறை வெளிச்சத்தில் கீழே பார்த்த குமரன் திடுக்கிட்டான். கணுக்கால் அளவு வெட்டப்பட்டிருந்த நைந்து போன மனிதக் கால். ரிப்போர்ட்டர் என்பதால் தைரியமாக போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்க நினைக்கிறான் அவன். பாதி வழியில் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் இறங்கிக்கொண்ட... Continue Reading →
நிலவுக்கும் நெருப்பென்று பேர் – Crime Novel
காதலர்களான புவனேஷும் முகிலாவும் திருட்டுத்தனமாகத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். புவனேஷின் பால்ய சிநேகிதன் தருண் திருமணத்திற்குத் திட்டம் தீட்டிக் கொடுக்கிறான். அன்று அதிகாலை திருமணம். ஆனால், வீட்டில் இருந்து கிளம்பிய முகிலா கோவில் வந்து சேரவில்லை. விஷயம் போலீசிற்கு செல்ல, விசாரணையில் முகிலா சென்ற டாக்ஸி கம்பெனி கண்டுபிடிக்கப்பட்டு டிரைவரை போலீஸ் விசாரிக்கிறது. ட்ரைவர் குடிபோதையில் இருக்க அவன் எடக்கு மடக்காக பதில் சொல்கிறான். மேலும் அவனுடைய டாக்ஸியில் உடைந்த கண்ணாடி வளையல்கள் கிடைக்கிறது. டிரைவரை... Continue Reading →
பஞ்சமாபாதகம் – Crime Novel
ஜர்னலிஸ்ட் என்ற போர்வையில் சென்னையில் இருந்து ஒடிஷாவிற்கு பயணப்படுகின்றனர் இனியனும் மான்யாவும். அவர்களுடன் தெர்மல் பிளாஸ்க்கில் பத்திரமாக கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்ய பெருமாள் சிலை. ஒடிஷாவில் மான்யாவின் தோழி பல்லவி வீட்டில் தங்கி, தாங்கள் கொண்டு வந்த சிலையை பெரும் தொகைக்கு விற்கத் திட்டம் தீட்டியிருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து கோயில்களில் சிலைகள் களவாடப்பட்டு அவை வெளிநாட்டிற்கு விற்கப்படுவதாகவும், அந்த சிலைக் கடத்தலைக் கண்டுபிடித்து அது பற்றி ஒரு ஆர்டிகிள் எழுதப் போவதாகவும் பல்லவியிடம் இருவரும் பொய்யுரைக்கின்றனர். இருவரும்... Continue Reading →
காற்று அடைத்த பையடா
சிறுகதைகள் மூலமாகவும் க்ரைம் கதைகளை வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்று இந்தக் கதையின் வழியே நிரூபித்துள்ளார் எழுத்தாளர் ர.சிவக்குமார். நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறிய தேவா மற்றும் சுபா என்ற இரண்டு கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதை க்ரைம் கதையாகும். பிறந்தநாள் பரிசாக தேவா கொடுத்த கிஃப்டே சுபாவின் மரணத்திற்கு காரணமாகி, கொலையாளியை நெருங்கவும் காரணமாக இருக்கும். சுபா இறந்த பிறகு கதையில் வேகம் கூடி குற்றவாளியைப் பிடித்த தேவாவின் அண்ணன் சிஐடி... Continue Reading →
சிவப்பு வானம் – Crime Novel
ஏரோபிளேன் நடுவானில் பறந்து கொண்டிருக்க, நிதி அமைச்சர் தேவநந்தன் தன் குடும்பத்தினருடன் விமானத்தில் வெகேஷனிற்கு சென்று கொண்டிருந்தார். டாய்லெட் சென்றுவிட்டு வந்தமர்ந்த சிறிது நேரத்திலேயே நெஞ்சைப் பிடித்துக்கொண்ட அவர் அப்படியே உயிரை விடுகிறார். ஃபிளைட்டில் இருந்த டாக்டர் அவரது மரணத்தை உறுதி செய்கிறார். அமைச்சரின் மரணத்தில் சந்தேகமடைந்த ஐ.ஜி, இந்தக் கேஸை க்யூ பிரான்ச்சை சேர்ந்த சஞ்சீவிடம் ஒப்படைக்கிறார். ஐ.ஜியின் சந்தேகத்திற்கு காரணம் ஹை ஃப்ளை ஏர்லைன்ஸ்-ல் அடுத்தடுத்து வரிசையாக விஐபி-களுக்கு மட்டுமே நிகழ்ந்த ஹார்ட் அட்டாக்... Continue Reading →
அரேபிய ரோஜா..! – Crime Novel
இந்த நிமிடம்...ஃசாப்ட்வேர் என்ஜினீயரான மஹிமா அவளுடைய எக்ஸிகியூடிவ் டைரக்டர் அழைப்பை ஏற்று அவரை சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறாள். அறையின் உள்ளே நுழைந்த அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மஹிமாவின் நீண்ட நாளைய கனவு ப்ராஜெக்ட்டான "அரேபிய ரோஜா"வை துபாயில் அரங்கேற்றுவதற்கு அல் அராஃபத் கம்பெனியினர் ஒப்புக்கொண்டதுதான். சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போன மஹிமா உற்சாகத்தில் அறைக்குத் திரும்பியவுடன், அவளுடைய பர்சனல் கம்ப்யூட்டரை ஆன் செய்தபோது டிஸ்பிளேயில் இருந்த மிரட்டல் செய்தி அவளை அதிர வைத்தது. இதற்கு நடுவில் ப்ராஜெக்ட்... Continue Reading →
கானல் நீரில் நீந்தும் மீன்கள்..! – Crime Novel
விஷ்வா - அஜந்தா இருவரும் காதலர்கள். இரண்டு வீட்டார் பக்கமும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் காதல் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இன்னும் மூன்று மாதங்களே கல்யாணத்திற்கு உள்ள நிலையில், ஒரு அதிர்ச்சியான செய்தி அவர்களை வந்தடைகிறது ஹரிதா மூலமாக. ஹரிதா - விஷ்வாவின் கல்லூரி தோழி, மும்பையில் வசித்து வருபவள். திடீரென மும்பையில் இருந்து சென்னை வந்த ஹரிதா நியூமராலஜியைக் காரணம் காட்டி, கல்யாணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்குமாறு விஷ்வாவிடம் கூறுகிறாள். மீறி விஷ்வா திருமணம்... Continue Reading →
விக்ரம்
இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட "அக்னி புத்திரன்" என்ற ராக்கெட்டை எதிரிகள் கடத்திச் செல்கின்றனர். ராக்கெட்டை மீட்பதற்காக எக்ஸ் ஏஜென்ட் விக்ரமை தொடர்புகொள்கிறது உளவுத்துறை. தன் புது மனைவி மீராவுடன் தேனிலவைக் கொண்டாடிக் கொண்டிருந்த விக்ரம் உளவுத்துறைக்கு உதவ மறுக்கிறான். அதற்குள் விக்ரமின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்ட வில்லன் சுகிர்தராஜா, விக்ரமைக் கொலை செய்வதற்கு ஆட்களை ஏவி விடுகிறான். எதிர்பாராத விதமாக கொலைகாரன் விக்ரமிற்கு பதிலாக அவன் மனைவி மீராவை குறி தவறி சுட்டுவிடுகிறான். மீராவைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காக களத்தில்... Continue Reading →
முகில் மைக்கல் மர்மம்..?!
ராயரின் பேரைச் சொன்னால் அந்த குப்பமே நடுங்கும். அந்த அளவிற்கு ராயரிடம் மரியாதை இருந்தது. புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டரைத் தவிர. ராயரை அவமானப்படுத்த நினைத்த இன்ஸ்பெக்டருக்கு ராயர் மகனின் போதைப் பொருள் விவகாரம் போதுமானதாக இருந்தது. போலீஸ், கோர்ட்டு என்று மாறி மாறி அலைந்து மைக்கலை ஒருவழியாக வெளியே கொண்டுவந்துவிட்டார் ராயர். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் வைத்தே மைக்கலை கொல்ல ஆட்களை அனுப்ப, ராயர் குறுக்கே வந்து விழுந்து மைக்கலை காப்பாற்றுகிறார். சாகும் தருவாயில்... Continue Reading →
சிவப்பு இரவு..?! – Crime Novel
பிரபலம் இல்லாத டிவி சீரியல் நடித்துக்கொண்டிருந்தான் முத்துக்குமார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாத அவனுடைய அம்மாவுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம். கையில் காசில்லாமல் இருந்த அவனுக்கு நண்பன் ராகவன் வலிய வந்து உதவி செய்கிறான். உதவியைப் பெற சென்றவனின் வாழ்க்கை சிக்கலில் சிக்கிக்கொண்டது. சூழ்நிலை மோசமானது. அண்ணாச்சியிடம் பணத்தை வாங்கச் சென்ற முத்துக்குமாரிடம் ஒரு உதவி கேட்கிறார் அவர். தவிர்க்க முடியாமல் அண்ணாச்சி சொன்ன இடத்திற்கு ஆக்ட்டிங் டிரைவராகப் போகிறான் முத்துக்குமார். அங்கே தான்... Continue Reading →
பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்..?!
ஒன்றில் இருந்து பத்துக்குள் ஒரு எண்ணை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவை முடிக்கும் வரையில் அந்த எண்ணை மறக்காமலும் மாற்றாமலும் வைத்திருங்கள். பலன் பதிவின் இறுதியில்... வாசகர்களே..! நீண்ட நாட்களுக்குப் பிறகு பெலுடா கதை வரிசையில் ஒரு தாறுமாறான விறுவிறுப்பான நாவல். உங்களுக்காக! காணாமல் போனதாக சொல்லப்படும் அந்த பொருள் இரண்டே அங்குலம் உயரம் உள்ள பிள்ளையார் சிலை. ஆனால், அது ஒரு அசாதாரண கலைப்பொருள். அதன் நடுவில் இருக்கும் பச்சை நிற வனஸ்பதி... Continue Reading →
பொன்னி
இதுதான் ஷான் அவர்களின் புனைவு தொடங்கும் இடம். ஆயிரமாயிரம் வருடங்களாக தனது ரகசியத்தையும் தன் மன்னருக்குத் தந்த சத்தியத்தையும் காப்பாற்றும் இரணிய சேனை மற்றும் தேரை இன மக்கள். நியூயார்க் பெடரல் வங்கியில் திருடப்பட்ட ஆறாயிரம் டன் தங்கத்தை மீட்க இந்தியா வரும் அமெரிக்க உளவுத்துறை. இந்திய நிலங்களில் தங்கத்தைத் தேடி லண்டனில் இருந்து வரும் ஆதி மைன்ஸ் தலைவரான பொன்னி. இவர்களை வைத்து நடக்கவிருக்கும் வெட்டாட்டமே “பொன்னி - இரணிய சேனை” சமீபத்தில் KGF பட... Continue Reading →
423.?!
அந்த பின்னிரவு நேரத்தில் காலிங்பெல் சத்தம் கேட்டவுடன் சற்று திடுக்கிட்டாள் டிஜிட்டல் மீடியாவில் வேலை பாக்கும் பிரியா. சற்று நிதானித்த அவள் பின் கதவைத் திறந்தாள். அவன் உள்ளே வந்தான். அடுத்த நாள் காலையில் இறந்து கிடந்தாள் அவள். கேஸ் ஹிஸ்டரியைப் பார்த்த போலீஸ் அதிகாரி கார்த்திகா அதிர்ந்தாள். கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண்ணின் நெற்றியில் 423 என்ற எண்ணால் சூடு வைக்கப்பட்டிருந்தது. கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் இரண்டு பெருவிரல்களும் வெட்டப்பட்டு இருந்தது.... Continue Reading →
சிறகடிக்க ஆசை..! – Crime Novel
அன்றைக்கும் ஒருவன் தன்னை பைக்கில் பின் தொடர்வதை அறிந்த லேகா கடுப்பானாள். இப்படி தினமும் கல்லூரி செல்லும்போதும், தோழிகளுடன் வெளியில் செல்லும்போதும் சிலர் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை சில நாட்களாகவே அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இதனாலேயே லேகா அவளுடைய அப்பா ராமகிருஷ்ணனை வெறுத்தாள். காரணம், லேகாவைக் கண்காணிக்க அவள் அப்பா அவளுக்கு பாடிகார்ட்ஸ் போட்டது தான். கோடீஸ்வரரான ராமகிருஷ்ணனின் ஒரே மகள் லேகா. சிறுவயதிலேயே தாயை இழந்த லேகாவிற்கு மிகவும் அரிதான நோய் இருந்ததால்,... Continue Reading →
மிஸ். ப்ரீதி, 545, பீச் ரோடு, மும்பை – Crime Novel
கலெக்டர் வகுளாபரணன் முக்கியமான மீட்டிங்கை அட்டென்ட் செய்வதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு முக்கியமான தகவலோடு ப்ரீதி என்ற ரிப்போர்ட்டர் பெண் கலெக்டரை சந்திக்க வருகிறாள். நீண்டகாலமாக கலெக்டர் தேடிக்கொண்டிருக்கும் ஸ்மக்ளர் சத்ரபதியைப் பற்றித் துப்பு கொடுக்க வந்திருப்பதாகச் சொல்லி கலெக்டரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறாள். அனுமதி கிடைத்ததும் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறாள் ப்ரீதி. ஸ்மக்ளர் சத்ரபதியின் மகள் தான் ப்ரீதி என்பதே பிறகு தான் கலெக்டருக்கே தெரியவருகிறது. கலெக்டர் வகுளாபரணனின் பெண் மதுமிதாவைக் கடத்தி வைத்துக்கொண்டு ஒரு... Continue Reading →
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது..?! – Crime Novel
பிறந்த வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு அன்று அதிகாலை தங்கை விஜயாவுடன் வந்து சேர்கிறாள் தாரிகா. நான்கு நாட்களுக்கு முன்பே கணவன் புஷ்பராஜ் வேலை விஷயமாக திருவனந்தபுரம் செல்வதாக தாரிகாவிற்குத் தகவல் தந்து விட்டுச் செல்கிறான். தன்னிடமிருந்த சாவியை உபயோகித்து பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்த தாரிகா, சுவரில் இருந்த ரத்தத் துளிகளைப் பார்த்துத் திகைத்தாள். போலீசிற்குத் தகவல் தெரிவித்த அவள், கலக்கத்துடன் காத்திருந்தாள். ரத்தத் துளிகளைத் தொடர்ந்து சென்ற போலீஸ், வீட்டிற்குப் பின்புறம் தோட்டத்தில் மண் இளகியிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.... Continue Reading →
விதி புதிது..! – Crime Novel
பெற்றோரை இழந்த வசந்தி சென்னைக்கு வேலை தேடி வருகிறாள். தோழி கல்பனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து தகவல் கொடுக்காமல் இரவில் அவள் வீட்டை அடைகிறாள் வசந்தி. கல்பனாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. விவரம் அறியாத வசந்தியைப் பின்தொடர்ந்து வந்த தேவ்-ரஷ்மி இருவரும் கல்பனாவைத் தேடி வந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். கல்பனாவிற்கு தெரிந்தவர்கள் என்று நம்பி அவர்கள் வீட்டிற்குச் செல்கிறாள் வசந்தி. ஆனால், பலான தொழில் செய்யும் தேவ்-ரஷ்மி இருவரும் அவளை இந்தத் தொழிலுக்குத் தள்ளத் திட்டம்... Continue Reading →
கேம் சேஞ்சர்ஸ்
சின்ன வயசுல நம்ம எல்லாருக்குள்ளேயும் Fantasy, Magic மேல ஒரு அதீத ஆசை இருந்திருக்கும். உதாரணமா 90's kids-க்கு ஜீபூம்பா பென்சில் மேல அவ்வளவு ஆசை இருந்திருக்கும். எதையாவது வரைஞ்சு மந்திரம் சொன்னா அது நிஜமா வந்துரும். அந்த மந்திரத்தை உச்சரிக்காத நாளே இருந்திருக்காது. உதாரணத்துக்கு Harry Potter படத்துல வர்ற மாதிரி 😊 வளர்ந்த பிறகு நம்ம சின்ன வயசு ஆசைகளையும் எண்ணங்களையும் நினைச்சா நாம சின்ன வயசிலேயே இருந்திருக்கலாம்னு தோணும். நமக்கு கஷ்டங்கள் வரும்போது... Continue Reading →
ராணி 2000..?!! – Crime Novel
இந்தியாவிற்கென ஒரு புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் கண்டுபிடிப்பில் மூழ்கியிருக்கிறாள் ராணி. சிறுவயது முதலே கம்ப்யூட்டர் துறையில் பூந்து விளையாடும் ராணி உலகம் முழுவதும் பேமஸ். இப்போது அவளுடைய திருமண வரவேற்பில் அவளைச் சந்திப்போம். ராணியின் திருமணத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டர் முதல் அமெரிக்க நண்பர்கள் வரை அனைவரும் ராணியைப் பற்றி புகழ்ந்து சொல்லிவிட்டு செல்ல, ரவிச்சந்திரனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. முதலிரவிலேயே அவளுடைய கம்ப்யூட்டர் ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறான் ரவிச்சந்திரன். தன்னுடைய ஆராய்ச்சியைப் பற்றிப் பெருமைப்படாமல் தனக்கு... Continue Reading →
ஜீவா ஜீவா ஜீவா – Crime Novel
டாக்டர் மகேந்திரனும் கம்ப்யூட்டர் ஸ்டுடென்ட்டான லலிதாவும் இரவு-பகலாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு ஜீவா என்னும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தனர். மனிதனின் மூளையை விட பத்து மடங்கு அதிகமாக சிந்திக்கும் திறனுடைய ரோபோ (ஜீவா) இப்போது இருப்பது Indian Institute of Science-ல். டெல்லியில் இருந்து Indian Institute of Science செமினாருக்குக் கலந்துகொள்ள வந்திருந்த புரபொசர் தன்பாலும் மித்ராவும் ஜீவாவை சந்திக்க விரும்பினர். ஜீவாவின் செயல்திறனைப் பார்த்து வியந்த மித்ரா ஆக்கப்பூர்வமான இந்தக் கண்டுபிடிப்பு அழிக்கப்பட வேண்டியது என்று... Continue Reading →
உயிர்த் திருடர்கள் – Crime Novel
தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ப்ளாக் ரோஸ்-க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் பாரதி. அங்குதான் லதிகா தற்சயம் தங்கியிருந்தாள். லதிகா – மொத்த நாடும் பார்த்து மிரண்டு நிற்கும் துணிச்சலான ஒரு ஜர்னலிஸ்ட், பாரதியின் உயிர்த்தோழி. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த இரண்டு மந்திரிகளின் வேலை போகக் காரணமாக இருந்தவள் லதிகா. அதனால் இயல்பாகவே அவளுக்கு எதிரிகள் அதிகம் இருந்தனர். இந்த வேளையில் தான் பாரதி அவளுக்கு பத்திரிக்கை கொடுக்க ஹோட்டலுக்குச் செல்கிறாள். எதிரிகள் பாரதி ஹோட்டலுக்குச்... Continue Reading →
நிழலின் குரல் – Crime Novel
சேகர் கிருஷ்ணாவிற்கும் சுகன்யாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ் அடித்த நிலையில், சேகர் கிருஷ்ணாவின் இரங்கல் செய்தி அடுத்த நாள் பேப்பரில் வெளியாகி சுகன்யாவையும் அவள் குடும்பத்தையும் அதிர்ச்சி அடையச் செய்கிறது. ஆனால், அது போலியான செய்தி என பின்னர் தெரியவர இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அன்றைய இரவே சேகர் கிருஷ்ணா கொலை செய்யப்படுகிறான். சேகர் கிருஷ்ணாவின் அப்பா ஐராவதமும் தம்பி முரளிகிருஷ்ணாவும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். நடந்தகொலைகளுக்கெல்லாம் காரணகர்த்தா யார்? கொலைகளின் நோக்கம் என்ன? விவேக்கிடம் குற்றவாளி... Continue Reading →
தாலிபன்
அந்த நடுநிசி நேரத்தில்.. தெருவில் இரண்டு பெண்களை பெயர் தெரியாத ஏதோ ஒரு போராட்டக் குழு வன்புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இது நடந்தது ஆப்கானிஸ்தானில். தன் கண் முன்னே விரிந்த அந்தக் காட்சியைப் பார்த்து, அந்த நிமிடம் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது அந்த இளைஞன் ஓமரால். தன்னுடைய நாட்டின் மோசமான நிலையை எண்ணி கலங்கிய ஓமர் அடுத்த நிமிடம் குதிரையில் அதிவேகமாகப் போய்க்கொண்டிருந்தார். சோவியத் யூனியனும் அமெரிக்காவும் முடிந்தவரை ஆப்கானிஸ்தானை வைத்துப் பந்தாடிச் சென்ற பிறகு..தடி எடுத்தவன்... Continue Reading →
மீண்டும் விவேக்கின் விஸ்வரூபம் – Crime Novel
இந்திய ராணுவத்திற்காக 90 நாட்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு உருவாக்கபட்ட 156 தலைசிறந்த வீரர்களை கவுரவிக்க நடந்து கொண்டிருந்த விழாவில் திடீரென வெடித்தது வெடிகுண்டு. அதில் 57 வீரர்கள் இறக்க, அரங்கில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயமே ஃபாரன்சிக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி சமூக ஆர்வலர் சத்யஸ்வரூப் பட்டாச்சார்யா அரசாங்கத்திற்கு எதிராக உண்மையான குற்றவாளியைக் கைது செய்ய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின்போது அந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இரண்டு மந்திரிகள் தான் காரணகர்த்தா எனவும் அவர்... Continue Reading →
IAS தேர்வும் அணுகுமுறையும்..?!
IAS எக்ஸாம் பத்தி உங்கள்ள நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கலாம். பத்து லட்சம் பேர் அப்ளை பண்ணி அதுல 3000+ முதல் நிலைத் தேர்வுல(Prelims) பாஸ் பண்ணி, அதுல 1௦௦0+ முதன்மைத் தேர்வுல பாஸ் பண்ணி இன்டர்வியூக்கு போனா, அதுல இருந்து தேவைப்படற 700+ ஆபீசர்ஸ UPSC செலக்ட் பண்ணுவாங்க. இது எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..அதையும் தாண்டி இந்த புத்தகத்துல நிறைய விஷயங்கள் இருக்கு. IAS ஆக என்னென்ன தகுதி வேணும்..? IAS-க்கு எப்படி... Continue Reading →
சர்ப்ப வியூகம் – Crime Novel
ஊட்டியில் உள்ள பிரபல தொழில் அதிபரான உமாபதி தன்னுடைய ஒரே மகளான துர்காவிற்கு வரன் தேடுகிறார். ஆனால் துர்காவும் வல்லப்பும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். வீட்டில் அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறாள் துர்கா. இந்நிலையில் எல்லாமே பொருந்திவர ஜாதகத்தில் வல்லப்பிற்கு களத்திர தோஷம் இருப்பது தெரிய வருகிறது. அதாவது திருமணமான ஆறே மாதத்தில் வல்லப்பின் உயிருக்கு கெடு வைக்கிறார் துர்காவின் குடும்ப ஜோசியர் மாதையா. பிடிவாதமாக இருந்த துர்கா வல்லப்பை திருமணம் செய்து கொள்கிறாள். யாரும் எதிர்பாராத வகையில்... Continue Reading →
அக்பர்
பத்தாம் நூற்றாண்டிலேயே முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்திருந்தாலும், பாபர் தான் முழுமையான முகலாய ஆட்சி இந்தியாவில் மலரக் காரணமாக இருந்தவர். அக்பரைப் பற்றி பார்ப்பதற்கு முன், அவருடைய வம்சாவளியைப் பார்ப்பது முக்கியமாகிறது. அப்போது தான் அக்பரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். முதன்முதலில் டெல்லியைக் கைப்பற்றிய பாபருக்கு இந்தியாவை நிரந்தரமாக ஆளும் எண்ணம் இல்லை. இங்கு இருந்த வளங்கள் மட்டுமே அவருடைய குறிக்கோளாக இருந்தது. ஆனால், காலம் அவரை இந்தியாவின் அரசராக மாற்றியது. பாபருக்குப் பின் வந்த... Continue Reading →
இனி இல்லை இலையுதிர்காலம்..! – Crime Novel
இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் நஞ்சுண்டேஸ்வரன். தான் வாழ்வில் முன்னேற காரணமாக இருந்த மாமா நஞ்சுண்டேஸ்வரனைக் காப்பாற்ற விபரீத முடிவை எடுக்கிறார் ஷிவ்ராஜ். தன்னுடைய புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனிக்கு ஆட்களை இன்டர்வியூ செய்வது போல் நடித்து மாமாவிற்குப் பொருந்தக்கூடிய கிட்னியை எடுக்க ஆரோக்கியமான நபரைத் தேடுகிறார்கள் ஷிவ்ராஜும் அவருடைய மூத்த மகனான விஷ்வாவும். அந்த லிஸ்டில் இன்டர்வியூவிற்கு வருகிறாள் ஜனனி. ஜனனி – ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்.... Continue Reading →
அந்தப்புரம்?!
ச்சீ.. ச்சீ.. இதைப் பத்தியெல்லாம் வெளிய பேசக் கூடாது..தப்பு என்பது போன்ற வசனங்களை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். நிறைய பேருக்கு தங்களது உடலில் நிகழும் மாற்றங்களை மற்றவர்களிடம் கேட்கத் தோன்றினாலும், பயத்தின் காரணமாக கேட்காமலேயே விட்டுவிடுவார்கள். நம்முடைய தாய்-தந்தை இல்லை எனில் இன்று நாம் என்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது செக்ஸ் என்ற வார்த்தையையே தவறாகப் பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் நமக்கு இந்தப் புத்தகம் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 12-ஆம் வகுப்பு விலங்கியல் பாடப்... Continue Reading →
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
பிரபலமான தமிழ் self-help புத்தகம். உணர்வுகளின் அறிவியலும், உளவியலும் சேர்ந்த படைப்பு. சோம. வள்ளியப்பன் அவர்களின் படைப்பு.
எமோஷனல் இன்டெலிஜென்ஸ்
“ஆனாலும் உனக்கு இவ்வளவு கோவம் ஆகாது.. உன்னை நான் வெறுக்கிறேன்.. அவன் ரொம்ப பாவம்.. இருட்டுன்னா எனக்கு ரொம்ப பயம்.. அவங்களுக்கு ரொம்ப இளகின மனசு..உடனே அழுதிருவாங்க.. நான் உன்னை நேசிக்கிறேன்..” இந்த வார்த்தைகளை உங்க வாழ்க்கையில ஒருமுறையாவது எல்லாரும் கேட்டு இருப்பிங்க. இந்த வார்த்தைகள் உணர்வோட சம்பந்தப்பட்டது. உணர்ச்சி இது இல்லாம மனுசங்க யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணர்ச்சி இருக்கும். ஒரு சிலர் அதிகமா கோவப்படுவாங்க..ஒரு சிலர் உடனே அழுவாங்க..ஒரு சிலர் மிதமிஞ்சிய... Continue Reading →
National Digital Library of India – தேசிய டிஜிட்டல் நூலகம்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4 கோடி 60 லட்சம் நூல்கள், வீடியோ பாடங்கள், ஆவணங்கள் என மாபெரும் நூலகமாக தேசிய டிஜிட்டல் நூலகம் உள்ளது. Indian Institute of Technology, Kharagpur வடிவமைத்து Ministry of Education வழங்கும் National Digital Library of India-வைப் படித்து அனைவரும் பயன்பெறுங்கள். பிரம்மாண்டமான இந்நூலகத்தில் ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரையில் உள்ள அனைத்து துறை நூல்களும் இலவசமாகப் படிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் கீழே... Continue Reading →
இல்லுமினாட்டி
இருவேறு உலகம் கதையில் இல்லுமினாட்டி கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் உடல் கருகி இறந்த விஸ்வம், போதையினால் இறந்துகொண்டிருந்த வேறு ஒருவனின் உடலில் புகுவது போல ஆரம்பித்திருக்கும் இந்தக் கதை. கதையின் ஆரம்பமே விறுவிறுப்பைக் கூட்டி ஊடு சடங்கு பற்றியும், உயிர் கூடுவிட்டு கூடு பாய்வதைப் பற்றியும் புதுப்புதுத் தகவல்களுடன் படிப்பவர்களின் மனதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். அதீத போதையின் காரணமாக நரம்புகள் செயலிழந்து இறந்துகொண்டிருந்த ஒருவன் திடீரென மருத்துவர்களே எதிர்பாராத வகையில் உயிர் பிழைக்கிறான். அதே வேளையில்... Continue Reading →
அப்பா வேலை..!
இதுவரை எத்தனை சீரியல்களில் அவர் கேரக்டர் கொல்லப்பட்டது என்பது கோவிந்தராஜிற்கே தெரியாது. குறைந்தது 15 சீரியல்களிலாவது அவர் இறந்திருப்பார். இந்த சீரியலிலும் கோவிந்தராஜ் சாவதற்கு தேதி குறித்து விட்டார்கள். ஆம்...இளவயதில் கிடைத்த டாக்டர், வக்கீல், போலீஸ் என்று நடித்துக்கொண்டிருந்த வேஷங்கள் எல்லாம் இப்போது அவரை விட்டு தூர சென்று விட்டிருந்தன. இப்போதெல்லாம் அவருக்கு அப்பா வேடங்கள் மட்டுமே வருகின்றன. காலத்திற்கேற்ப கோவிந்தராஜின் சீரியல் வேடங்களும் வேகமாக மாறிவந்தன. இதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், “மரணம்..” அனைவருக்கும் சகிக்க... Continue Reading →
சாமி & கோ
20 ஆம் நூற்றாண்டின் கடைசி சில ஆண்டுகள் தொழில்முறையிலும் தொழில்நுட்பத்திலும் அதிசயிக்கும்படி பல மாற்றங்களை அடைந்து வரும் ஆண்டு. இப்பேர்ப்பட்ட மாற்றங்கள் எல்லாம் அந்தச் சிறுவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. “அடேய் சம்முகா! மெய்யாலுந்தாண்டா, நாம இப்ப சாப்பிட்டுட்டு இருக்குற இந்த முட்டாயோட சவ்வு காகிதத்துல இருக்காரு பாரு இவரு...” என்றபடியே தன் கையிலுள்ள காகிதத்தை சண்முகம் முகத்தருகில் கொண்டு சென்றான் அஜ்மல். அதில் முகேஷ் கண்ணா ‘சக்திமானாக’ நெடிதுயர்ந்து நின்றிருந்தார். “இவரு தான்டா சக்திமான், இவர் தான்... Continue Reading →
நாயகி
மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த சுலோச்சனா முதல் முறையாக தன்னுடைய கிராமத்தில் இருந்து நகரத்தில் தங்கி படிக்க வருகிறாள். சுலோச்சனாவின் ஒரே நோக்கம்..நன்றாகப் படிக்க வேண்டும் என்பதே. ஊர் விட்டு ஊர் வந்த சுலோச்சனாவிற்கு நகரத்தில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது. மேலும் அதுவரை நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவளுடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையாக பிரசன்னா வருகிறான். அழகான & பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரசன்னாவைச் சுற்றி எப்போதுமே பெண்கள் கூட்டம் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பிரசன்னாவே விழுந்தது சுலோச்சனாவைப்... Continue Reading →
நெஞ்சில் ஒரு நெருப்பு..! – Crime Novel
இரவு தூங்கிக்கொண்டிருந்த ராயப்பன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு நபர்களும் அட்டைக்கரி போல் உடல் கருகி சாவு – செய்தி. பாறைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராயப்பன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு வீடு எரிந்த கேஸில் துப்பு எதுவும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. கேஸிற்கு முற்றுப்புள்ளி வைக்க அதே கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் ரத்தினகுமாரை அனுப்பி விரிவான விசாரணை மேற்கொள்ள கமிஷனரிடம் இருந்து உத்தரவு வருகிறது. ரத்தினகுமாருடன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ரேகாவையும் உடன் அனுப்பி வைத்தார்... Continue Reading →
நவம்பர் ராத்திரிகள் – Crime Novel
தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை கொடைக்கானலில் உள்ள மாமா வீட்டிற்கு குடுத்து விட்டு கொண்டை ஊசி வளைவுகளில் நிதானமாக வண்டியை வளைத்து ஓட்டினான் சுபாஷ். மாலை நேர இருள் கவியும் நேரம். பைக்கை மறித்து நின்றாள் சித்ரா. காதலிப்பதாகச் சொல்லி சித்ராவுடன் ஊர் சுற்றிய சுபாஷ் பணக்கார சம்பந்தம் கிடைக்கவும் அவளைக் கேவலமாகப் பேசிவிட்டு அங்கிருந்து நழுவுகிறான். நடக்க இருந்த கல்யாணத்தைத் தடுத்து, சுபாஷின் மூச்சை நிறுத்த சித்ராவின் அண்ணன் அவளுக்கு ஒரு திட்டம் போட்டுக் குடுக்கிறான். எதிர்பாராத... Continue Reading →
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்..!?
“அடுத்து படிக்கப்போகும் அந்த சூழ்நிலையில் உங்களை வைத்து உங்களுக்குள் கற்பனை செய்துகொள்ளுங்கள்” “ஓர் இரவில், தனிமையை உணர்ந்து, சில சிந்தனைகளின் உந்துதலில், உங்கள் காரை எடுத்துக்கொண்டு யாரும் இல்லா தார்ச்சாலைகளில் மெதுவாக நகன்று சென்றுகொண்டிருக்கும் போது… அப்போது ஒரு சாலையின் ஓரத்தில் இருந்து ஒரு நபர் (ஆண் அல்லது பெண் உங்கள் கற்பனைக்கு..) உங்கள் காரை மறித்து, தனது மொபைல் ஆஃப் ஆகிவிட்டதாகவும், வெகுநேரம் நடந்து களைத்து விட்டதாகவும், இரவு நேரமாதலால் தன்னை வீட்டில் விடும்படி லிஃப்ட்... Continue Reading →
DAY10 | நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா..?!
முகத்தில் சிறு சிறு சலனங்களுடன் போலீஸ் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார் டாக்டர் இந்துவதனா. அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒன்று அந்த அறையில் நிகழ்ந்தது. டாக்டர் இந்துவதனா தனக்குத் தானாகவே விஷ ஊசியைப் போட்டுக்கொண்டாள். அனைவரின் சாட்சியாக நிமிட நேரத்தில் நிகழ்ந்த தற்கொலை. சிகிச்சைப் பலனின்றி இறந்து போனாள். சில மணி நேரங்களுக்கு முன்… குரு, சங்கவி, மனோ, ஸ்ருதி நால்வரும் போலீஸ் ஆபிசர் நவநீதனுடன், டாக்டர் இந்துவதனாவை சந்தித்து, கயல்விழி என்ற இளம்பெண்ணைப் பற்றித் தெரிந்துகொள்ள குட்... Continue Reading →
DAY09 | ஃப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட்
தொலைந்துபோன புது காரைக் கண்டுபிடிக்கச் சென்ற போலீசிற்கு அந்தக் காரின் உள்ளே ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் உடலில் கறுப்பு பெயிண்ட்டை ஊற்றியிருந்தார்கள். போலீசிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கொலையைப் பற்றி மேற்கொண்டு விசாரிக்க அதிரா அப்பார்ட்மெண்ட்டிற்குச் செல்கிறார் போலீஸ் ஆபிசர் சந்திரசூடன். ஆனால் அங்கு அவருக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மர்மங்களுக்குப் பெயர் போன அதிரா அப்பார்ட்மெண்ட்டைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றனர். மயானத்தின் மீது... Continue Reading →
DAY08 | பால் நிலா ராத்திரி..!
மயக்கம் தெளிந்து கண்விழித்த வனிதா, ஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை எண்ணி கலக்கமடைகிறாள். தன்னுடைய கைகள் வளையத்தில் மாட்டப்பட்டிருக்க, சற்றுமுன் நடந்த சம்பவங்களை பயத்துடன் மனதிற்குள் அசைபோடுகிறாள். சூப்பர் மார்க்கெட்டில் பர்சேஸ் முடித்துவிட்டு டாக்ஸியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த வனிதா, மயக்க மருந்தின் உபயத்தால் வண்டியிலேயே சரிய, டிரைவர் அவளை அந்த இடத்திற்குக் கொண்டு வந்தது தெரியவருகிறது. பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த வனிதாவிற்கு மீண்டும் மயக்க மருந்தை செலுத்தி, அவளுடைய இருதயத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டான் அவன். வனிதாவைத் தேடி... Continue Reading →
DAY07 | விவேக்கின் விஸ்வரூபம்
ஃப்ளைட் 747 பயணிகளுடன் பறக்கத் தயாராகக் காத்திருந்தது. அன்றைக்கு அந்த விமானத்தில் லண்டன் வரை பறக்க இருந்த பயணிகளில் நிறைய பேர் பிரபலமானவர்கள். இதில் விவேக்கும் ஐபிஎஸ் கிரணும் அடக்கம். ஸ்காட்லான்ட் யார்டின் ஆண்டு விழா செலிப்ரேசனில் கலந்து கொள்வதற்காகச் செல்கின்றனர். ஏற்கனவே வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் ஃப்ளைட்டை எடுக்க பைலட் பகாடியாவும் நிரம்ப யோசித்தார். கடைசியில் ஃப்ளைட்டை எடுக்க வேண்டிய கட்டாயம். விண்ட்ஸர் தீவைக் கைப்பற்றத் திட்டம் போட்டிருந்த கிம்போ... Continue Reading →
DAY06 | 50kg தாஜ்மஹால்..?!
டிவியில் பரதநாட்டிய புகழ் ஜோதிகாவின் பேட்டி முடிந்து போயிருக்க, ஜோதிகா டிவியை நிறுத்த நினைத்த விநாடி டெலிபோன் அழைத்தது. எடுத்து பேசிய ஜோதிகாவிடம் பேசியது கோகுலன். எந்த கோகுலன்..? ஐந்து வருடங்களுக்கு முன்னால் மைக்கேலைக் காதலித்த ஜோதிகா சர்ச்சில் அவனைத் திருமணம் செய்து கொண்ட போது போட்டோ எடுத்த மைக்கேலின் பிரெண்ட் தான் அந்த கோகுலன். திருமணமான ஒருமணி நேரத்துக்குள்ளேயே அவனுடைய சுயரூபம் தெரிந்து மைக்கேலின் முகத்தில் மோதிரத்தை விட்டெறிந்து விட்டு வந்தவள். பழைய நினைவுகளில் இருந்து... Continue Reading →
DAY05 | சொர்க்கத்தின் புதிய முகவரி..?
துணிக்கடையில் பர்சேஸிங்கை முடித்து விட்டு அப்போதுதான் வீடு திரும்பினர் உதயகுமாரும் வித்யாவும். வீட்டின் பூட்டைத் திறக்கச் சென்ற வித்யா அதிர்ச்சி அடைந்தாள். காரணம்..பூட்டப்பட்டிருந்த வீடு திறந்து கிடந்தது. திடுக்கிட்ட இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்க்க, அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன. வீட்டின் பின்புறம் சென்று பார்த்த வித்யாவின் கால்களில் ஏதோ ஒட்டியது. கீழே குனிந்து பார்த்த வித்யா வீறிட்டாள். இரத்தத் துளிகள்.. துணிச்சலை வரவழைத்துக்கொண்ட உதயகுமாரும் வித்யாவும் வீட்டை அலசுகின்றனர். ரத்தத் திட்டுகளைப் பின்தொடர்ந்து... Continue Reading →
DAY04 | அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்..?!
அவனுக்கு ப்ளட் கேன்சர் என்பதை அறிந்த நிமிடத்தில் இருந்தே நடைப் பிணமாக மாறிவிட்டிருந்தான் பரணி. ஆறு மாதம் மட்டுமே அவன் உயிருக்கு கெடு வைத்திருந்தார் டாக்டர். துக்கம் தாளாத அவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான். தூரத்தில் ஒரு ரயில் வருவது தெரிய, விழுவதற்காக தயாரானான் பரணி. கண்ணை மூடிக்கொண்டு அவன் ரயிலின் முன்னே பாய நினைத்த விநாடி ஒரு கை அவனை பின்னுக்கு இழுத்தது. பரணியைக் காப்பாற்றிய அவன் தன்னை சுபாஷ் என்று அவனிடம்... Continue Reading →
DAY03 | நம்ருதாவின் நாள்..
இடம் : கல்யாண ரிசப்ஷன் மணமேடையில் நின்றிருந்த மணமக்களான ஈஸ்வர்-நம்ருதா போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர். அதே வேளையில் நம்ருதாவிற்கு ஒரு போன் வருகிறது. நூறு நாளில் நம்ருதாவின் வாழ்வில் விபரீதம் நிகழப் போவதாக அந்தக் குரல் மிரட்டிவிட்டு போனை வைக்கிறது. அதிர்ந்த அவள் ஈஸ்வரிடம் விசயத்தைச் சொல்ல அவன் அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அடுத்த நாள் அதே நபரிடம் இருந்து மீண்டும் ஒரு போன் வருகிறது. சந்திரவதனம் இவர்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருந்தான். கலக்கத்துடன் அந்த கிப்ட்டைப்... Continue Reading →
DAY02 | ரெட் ரோஸ் கெஸ்ட் ஹவுஸ்.!!
முதலமைச்சர் சத்தியவதியின் மகளும் மருமகனும் கடத்தப்பட்ட வீடியோ கேசட்டைப் பார்த்து திடுக்கிட்டான் விவேக். இடம் முதலமைச்சரின் வீடு. ‘நாளைய பாரதம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்களைக் கடத்திப் பிணையாக வைத்துக்கொண்டு சில கோரிக்கைகளை முதலமைச்சரின் முன் வைக்கிறார்கள். ரெட்ரோஸ் கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றிருந்த முதலமைச்சர் மகளும் மருமகனும், 6 காவலாளிகளும் கடத்தப்பட்டிருந்தனர். முதலில் அந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து விசாரணையை ஆரம்பிக்க நினைக்கிறான் விவேக். அதற்கு முன்னரே கெஸ்ட் ஹவுஸில் விபரீதம் ஆரம்பித்திருந்தது. அதே வேளையில் பணக்காரர்களைக்... Continue Reading →
DAY01 | அமிர்தம் என்றால் விஷம்..!
காரில் இறந்து கிடந்த அமைச்சர் கார்மேகவண்ணனைப் பார்த்ததும் ரிப்போர்ட்டரான பாரி திடுக்கிட்டான். உள்ளே அமைச்சரின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடந்துகொண்டிருக்க, சக ரிப்போர்ட்டரான நிருபமாவிடம் தான் பார்த்த நிஜத்தை கலக்கத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான் பாரி. பிறந்தநாள் இறந்தநாளாக மாற, அமைச்சரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி. ‘அமிர்தம் என்றால் விஷம்’ என்ற எழுத்துக்கள் அமைச்சரின் முதுகில் பச்சை குத்தப்பட்டிருந்தது. கார்மேகவண்ணனின் மகன் செழியனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் கிடைக்காமல் போகவே, கேஸை வேறொரு... Continue Reading →
ராஜேஷ்குமார் நாவல்கள் – 10 Day Challenge
ராஜேஷ்குமாரின் தொடர்கதைகளை வழங்க இயலாத காரணத்தால், நாங்கள் உங்களுக்காக 10 சிறந்த, விறுவிறுப்பைத் தரக்கூடிய, மதிப்புமிக்க க்ரைம் நாவல்களைப் பற்றிய அறிமுகத்தைத் தர உள்ளோம். 10 நாட்கள் தொடரும் இந்த சவால் நாளை முதல் தொடங்க உள்ளது. ஒரு நாள் ஒரு நாவல். படித்து மகிழ்ந்திருங்கள். இணைந்திருங்கள் one minute one book உடன். #one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #10_day_challenge
நீ..நான்..தாமிரபரணி.!
25 வருடங்களுக்கு முன்.. காதலை மையப்படுத்தி சேதுபதி எழுதிய நீ..நான்..தாமிரபரணி.. நாவல் வெகுவாகப் பிரபலமாகிறது. ஆனால், சில நாட்களிலேயே நாவல் எழுதிய ரைட்டர் சேதுபதி காணாமல் போகிறார். ரைட்டரைத் தேடிச் சென்ற சிலருக்கு பெரிய இடத்தில் இருந்து மிரட்டலும் எச்சரிக்கையும் வந்த வண்ணம் இருக்கிறது. 25 வருடங்களுக்குப் பிறகு.. சேதுபதியைத் தேடும் பொறுப்பை தன்னுடைய “உண்மை” பத்திரிக்கையின் துடிப்பான ரிப்போர்ட்டரான அருணிடம் ஒப்படைக்கிறார் ஆசிரியர் அம்பலவாணன். அவரும் ஒரு காலத்தில் சேதுபதியைத் தேடச் சென்று எதிரிகளின் கோபத்தை... Continue Reading →
விவேக் வியூகம் – Crime Novel
சேறும் சகதியுமாக இருந்த ரோட்டில் மிட்நைட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்த மங்களேஷும் பாசுவும் விஜிலன்ஸ் ஆபிசர் சுக்தேவ்வை திட்டிக்கொண்டே சென்றனர். இதுவரை இரவில் இப்படி அழைத்திராத சுக்தேவ் திடீரென அழைத்ததற்கான காரணம் புரியாமல் அவர் வீட்டை அடைந்தனர். வீட்டிற்குள் செல்லும் முன்... நாட்டின் மொத்த கரன்சி நோட்டுக்களையும் பிரிண்ட் செய்யும் இண்டியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் (நாசிக்) எலெக்ட்ரானிக் இன்ஜீனியர்ஸாக வேலை பார்க்கும் இருவரும் சுக்தேவ் வீட்டை அடைந்த பொழுது உட்கார்ந்த நிலையில் அப்பொழுது தான் ரத்தம் சிந்தி அவர்... Continue Reading →
கொன்றாள்..கொன்றான்..கொன்றேன் – Crime Novel
மங்களூர் எக்ஸ்பிரஸ் வேகமாகப் போய்க்கொண்டிருக்க அந்தக் கூபேயில் ஹரிபாபுவும் மேத்தாவும் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்தனர். டிக்கெட் செக் செய்ய வந்த டிடிஈ மோகன்ராஜை கூட்டு சேர்த்துக் கொண்டு குடித்து கும்மாளம் போட்டுக்கொண்டே வந்தனர். டிடிஈ-க்கு போதை அதிகமாகவே தங்களுடைய திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தனர் மேத்தாவும் ஹரிபாபுவும். கடத்திக் கொண்டுவந்திருந்த தங்க பிஸ்கெட்டுகளை டிடிஈ மோகன்ராஜின் பெட்டிக்குள் மறைத்து வைக்க உதவி கேட்கின்றனர். பயந்துகொண்டே ஒப்புக்கொண்ட டிடிஈ-யை இருவரும் சேர்ந்து சமாதானப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அடுத்த ஸ்டேஷனில் ஏறிய போலீஸ் மேத்தா-ஹரி... Continue Reading →
பகடைக் காய்கள்..! – Crime Novel
அண்டை நாடுகளுடனான போரை விலக்கி சமாதானத்தை முன்னிறுத்த பாராளுமன்றத்தில் இருந்து பொறுப்புள்ள எம்.பிக்களைக் கொண்ட ஒரு குழு பயணிகளுடன் சேர்ந்து விமானத்தில் பறக்க இருந்தது. அந்தத் திட்டத்தை முறியடித்து 7 எம்.பிக்களுக்கும் 8 பயணிகளுக்கும் விமானத்திலேயே சமாதி கட்டுவது தான் திட்டம். உஸ்மானும் பாபுராவும் முதலில் திட்டத்தை சொன்ன போது யோசித்த சென்னும் துவாரகேஷும் தொகை பெரிதாகப் பேசப்பட்டவுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர். இந்தத் திட்டத்திற்காக 25 கோடிக்கு விலை போன பைலட் சென்னும் கோ-பைலட் துவாரகேஷும் திட்டத்தை... Continue Reading →
ப்ராஜக்ட் ஃ
சின்ன வயசுல நாம எல்லாரும் புதையல் தேடிப் போற மாதிரியான சாகசக் கதைகளை ரொம்ப விரும்பிப் படிச்சிருப்போம். ஆனா, புதையலைப் பத்தி பெரியவங்களும் விரும்பிப் படிக்கற மாதிரி எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் இந்த ப்ராஜக்ட் ஃ இந்தக் கதையோட ஹீரோ வில்லனோட ஆணையின்படி புதையலைத் தேட வேண்டிய கட்டாயத்துல இருக்கான். இறந்துபோன தன்னோட தாத்தா விட்டுட்டு போன குறிப்புகளை வெச்சு ஹீரோ புதையலைக் கண்டுபிடிக்கணும். புதையலின் குறிப்பை விட்டுச்சென்ற தாத்தா, அந்தப் புதையலால் வரும் ஆபத்தையும்... Continue Reading →
தப்பு செய்.! தப்பிச்செல்..!! – Crime Novel
“குடுவைக்குள் இருந்து வெளியே எடுத்த 30 வினாடிக்குள் வெடிக்கும் ஒப்வா லசிகா ஒரு காந்தம் போன்று செயல்படக்கூடியது. டார்கெட் செய்த இடத்தில் இருக்கும் ஏதாவதொரு காரில் ஒட்ட வைத்துவிட்டால், பெட்ரோல் டாங்க் வெடித்து சேதாரம் அதிகமா இருக்கும் என்பதால் இந்த வெடிபொருள் தீவிரவாதிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது” என்ற தகவல் லலித் சர்மாவின் அடிவயிற்றைக் கலக்கியது. இந்தியாவின் இராணுவ ஏர் மார்ஷல் பிலிப்ஸ் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக ரகசியமாக ரோமிற்கு வந்து இத்தாலியின் இராணுவ... Continue Reading →
தனித்திரு.! விழித்திரு..! – Crime Novel
பிரதாப்பை விரும்பும் அட்சதா தன்னுடைய முதலாளியின் பையன் சரணை ஏற்க மறுத்து விருப்பத்தைச் சொல்ல நாட்களைக் கடத்துகிறாள். இந்நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்த அட்சதாவின் அண்ணன் சபாபதிக்கு வேலை கிடைக்கிறது. ஒரு வாரம் ட்ரெய்னிங்கிற்காக அவன் மும்பை செல்ல வேண்டியிருந்தது. சிட்டியிலிருந்து ஒதுக்குப்புறமாக குடியிருக்கும் சபாபதியும் அட்சதாவும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். தங்கையைத் தனியே விட்டுச் செல்ல தயங்கிய சபாபதி, பால்ய நண்பன் லீலாகிருஷ்ணன்-வாசுகி வீட்டில் அவளை விட்டுச் செல்கிறான். ஏற்கனவே பிசினஸில் ஏகப்பட்ட நட்டம் ஏற்பட்டு கஷ்டத்தில்... Continue Reading →
BitTalk-இல் ராஜேஷ்குமார் நாவல் தொடர் இலவசமாகப் படிக்க – அமிர்தம் என்றால் விஷம்..!
வாராவாரம் ஆரவாரமாக ராஜேஷ்குமார் சாரின் “அமிர்தம் என்றால் விஷம்” திக் திக் தொடர் இலவசமாக BitTalk-இல் வலம்வந்து கொண்டிருக்கிறது. தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் 36 வாரங்கள் தொடர்கதையாக வெளிவந்த இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்கள் உங்களுக்காக இப்போது BitTalk-இல். முகம் பத்திரிக்கை பிரஸ் ரிப்போர்ட்டர்ஸான பாரியும் நிருபமாவும் இருட்டு விலகாத அதிகாலை நேரத்திலேயே அமைச்சர் கார்மேகவண்ணனின் பிறந்தநாள் விழாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். கேமராவை மறந்து வண்டியிலேயே விட்டுச் சென்ற பாரி அதை எடுத்து வர வண்டி பார்க்... Continue Reading →
வாஷிங்டனில் விவேக்!! – Crime Novel
நள்ளிரவு நேரத்தில் சி.பி.ஐ ஆபிசிற்கு பைக்கில் விரைந்து கொண்டிருந்த விவேக்கின் வழியைக் குறுக்கிடும் விதமாக கார் ஒன்று ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கிய விவேக்கை நான்கு பேர் கொண்ட குழு கடத்திச் செல்ல, விவேக் யோசனையுடன் சென்றான். அங்கே அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சிபிஐ சீஃப் வாத்சல்யனுடன் இரண்டு சிஐஏ அதிகாரிகளான கேரி மற்றும் ஹோம்ஸை விவேக் அங்கு சந்தித்தான். வந்திருந்த அமெரிக்கர்களுக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க நடத்தப்பட்ட டிராமா தான் இந்த கடத்தல்... Continue Reading →
அந்த ரத்த நாட்கள்?! – Crime Novel
சங்கர நாராயணன் டேப்பில் ரெக்கார்ட் செய்து எடுத்து வந்திருந்ததைப் போட்டுப் பார்த்த விவேக் அதிர்ந்து போனான். இரண்டு நபர்கள் உரையாடிய சம்பாஷணையின் சாராம்சம் இதுதான்..தமிழ்நாட்டில் வைத்து பிரதமர் ஆகாஷைக் கொல்வது. இதற்கு நடுவில் எதிர்கட்சித் தலைவர் காந்திலால் வயது மூப்பின் காரணமாக பாத்ரூமில் கால் இடறி கோமா ஸ்டேஜிற்குச் செல்கிறார். பிரதமரின் செயலாளர் வாத்வா சொன்ன இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்த பிரதமர் ஆகாஷ், எப்பாடு பட்டாவது காந்திலாலைக் காப்பாற்ற சொல்கிறார். பிரதமர் கூறியதாகச் சொல்லி காந்திலாலை... Continue Reading →
என் வானம் மிக அருகில் – Crime Novel
சினிமாவில் கொஞ்ச கொஞ்சமாகப் பாட்டெழுதி பிரபலமாகிக் கொண்டு வந்தான் குறிஞ்சி. அன்றைய தினம் ஒரு பத்திரிக்கைக்குக் காரசாரமாகப் பேட்டி கொடுத்து முடித்துவிட்டு பாட்டை டைரக்டரிடம் பாடிக் காட்ட இருந்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம். பாடகியான தன் காதலி ரமாவும் குறிஞ்சியிcன் பாடல் வரிகளைக் கேட்டுவிட்டுப் பாராட்ட, டைரக்டரின் எதிர்பார்ப்போ வேறு மாதிரி இருந்தது. ஏற்கனவே எடுத்த படத்தில் புதுமுக கவிஞர் மோதி எழுதியிருந்த ரெட்டை அர்த்தப் பாடல்கள் ஹிட் அடித்ததால் குறிஞ்சியையும் அதேபோல் ரெட்டை அர்த்த வரிகளில் பாட்டெழுத... Continue Reading →
விபரீதங்கள் இங்கே விற்கப்படும்..! – Crime Novel
துப்பாக்கியோடு வந்து வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வளர்மதியைப் பார்த்து சற்று அரண்டு தான் போனார் ஈஸ்வர். பிரபல தொழிலதிபரான ஈஸ்வர் சொந்தப் பணத்தில் வருடந்தோறும் ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் செய்துவைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். இப்படிப்பட்ட ஈஸ்வரை வேவு பார்க்க வந்தவள் தான் வளர்மதி. குடும்பத்திற்கும் கணவர் ஹரிக்கும் தெரியாமல் போலீஸ் இன்பார்மராக இருப்பவள். தைரியசாலியான வளரின் சிறுவயது போலீஸ் கனவு நிறைவேறாத காரணத்தால் மறைமுகமாக கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு கீழே இப்போது இன்பார்மராக... Continue Reading →
என்றாவது ஒருநாள்..! – Crime Novel
தந்தையுடன் மெட்ராஸில் இருந்து வந்திருந்த புனிதா, நாலு நாளாக அவளுடைய வீடு பூட்டிக் கிடப்பதாக பக்கத்து வீட்டு மாமி கூறியதும் அதிர்ச்சி அடைகிறாள். தன்னுடைய கணவன் ராதாகிருஷ்ணனுடைய ஆபிஸ் நம்பருக்கு போன் செய்த போது அவன் மெட்ராஸிற்கு சென்றிருப்பதாக கூறியவுடன் மேலும் கலக்கமடைந்தாள். சற்று நிதானித்த அவள் பிறகு மாமியிடம் இருந்து கீ பன்ச்சை வாங்கி வீட்டைத் திறக்க முற்படுகிறாள். அதற்குள் ராதாகிருஷ்ணனைப் பற்றிப் பார்த்து விடுவோம். டயர் கம்பெனியில் கிளார்க்காக வேலை செய்யும் ராதா, பகுதி... Continue Reading →
நீ மட்டுமே வேண்டும்..! – Crime Novel
ஏரியாவில் இருக்கும் சில ரௌடிகள் தன்னிடம் வம்பிழுப்பதாகவும், அதனால் தனக்கு கராத்தே சொல்லிக்கொடுக்கும்படி சத்யேசுவிடம் வேண்டிக் கேட்கிறாள் சுகிர்தா. ஆண்களுக்கு மட்டுமே கராத்தே சொல்லிக்கொடுத்து, பகுதி நேர டிடெக்டிவாகவும் இருக்கும் சத்யேசு யோசித்து முடிவெடுப்பதாகக் கூறி அவளை அனுப்பி வைக்கிறான். விதி வலியது. இந்தப் பெண்ணுக்காக தன்னுடைய கராத்தே பள்ளி விதிகளை கைவிட வேண்டுமா..? என்று எண்ணிக் கொண்டிருந்த சத்யேசுவிற்கு மிரட்டல் போன் வருகிறது. போன் செய்தவன் சுகிர்தாவிற்கு கராத்தே கற்றுக் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கிறான்.... Continue Reading →
இரத்தம் இல்லாத யுத்தம் – Crime Novel
படிப்பு வாசனையே அறிந்திராத பழங்குடியினர்கள் வாழும் நரிக்கொம்பு கிராமத்தில் இருந்து எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையைப் படிக்க சொல்லி குணால், ஜெனிஃபரிடம் நீட்டினார் லென்ஸ் வார இதழின் எடிட்டர். சிம்பிளான வரிகளில் சிறப்பாக எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையைப் படித்த இருவரும் வியந்தனர். அந்தக் கவிதையை எழுதியிருந்த இசக்கி என்ற பெண்ணை சந்தித்து மேலும் அந்த கிராமத்தில் நடப்பவற்றை கவர் ஸ்டோரியாகக் கொண்டு வர இருவரையும் நரிக்கொம்பு ஃபாரெஸ்ட்டுக்கு அனுப்புகிறார் எடிட்டர். பழங்குடியினக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க அந்த கிராமத்திற்கு... Continue Reading →
கோடி கோடி மின்னல்கள்..! – Crime Novel
தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அதிலிருந்து அவர்களை மீட்பதற்காக “மனசுக்குள் மழையா..?” என்ற பெயரில் சைலென்ட்டாக சமுதாயப் பணியாற்றிவரும் வைகை, அந்த ‘மெட்டியோசை’ பெண்கள் மாத இதழுக்கு பேட்டி கொடுக்க மறுத்து விடுகிறாள். மன நிம்மதிக்காக செய்யும் ஒரு விசயத்தை விளம்பரம் போட்டு வியாபாரமாக்குவதை விரும்பாத வைகை, ஹன்ஸா ஹாஸ்பிடலில் டைபிஸ்ட் வேலையில் இருப்பவர். அதிர்ஷ்டவசமாக வைகையின் தொண்டுப் பணிக்கு தயாநிதி அறக்கட்டளையில் சார்பில் 5 லட்ச ரூபாய் கிடைக்க, அதை வைத்து சேவையைத் தொடர... Continue Reading →
சிவப்பின் நிறம் கருப்பு..?! – Crime Novel
அந்த அதிகாலை வேளையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாவின் வீட்டுக்கு வர, அவளுடைய அப்பா சத்தியமூர்த்தி சற்று திகைத்துப் போனார். பின் சுதாரித்த அவர், அருணாவை அழைத்து வந்தார். கைனகாலஜிஸ்ட் டாக்டரான அருணா, முந்தைய நாளிரவு நடந்த சம்பவங்களை அசைபோட்டபடியே வந்தாள். அந்த முன்னிரவு வேளையில் காரில் வந்துகொண்டிருந்த அருணா, ரோட்டில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவனைக் காப்பாற்ற போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு வீடு வந்து சேர்கிறாள். ஆனால், கதையின் முக்கிய திருப்பம் ஆரம்பத்திலேயே வந்து அருணாவைத் திணறடிக்கப்... Continue Reading →
வெற்றி என்றால் விவேக்.! – Crime Novel
மைக்ரோ பயலாஜிகல் ரிசர்ச் ஸ்காலரான ஸ்வப்னா காணாமல் போய் ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், அன்றைய தினம் அவளுடைய பிணத்தைப் போலீசார் கைப்பற்றியிருந்தனர். ஸ்வப்னா கடைசியாக விவேக்கிற்கு எழுதிய முற்றுப்பெறாத அந்தக் கடிதம் போலீசிற்கு தடயமாகக் கிடைக்கிறது. அதில் அவள் “இந்த லெட்டருடன் நான் அனுப்பியுள்ள ஆ..” என்று ஆரம்பிப்பதற்குள் அவள் எழுதியிருப்பது தடைப்பட்டிருந்தது. இதன் மூலம் அவள் லெட்டருடன் வேறு எதையோ சேர்த்து அனுப்ப திட்டமிட்டிருப்பதை உணர்ந்த விவேக், விஷ்ணுவிடம் அந்த விசாரணையை மேற்கொள்ள சொல்லிவிட்டு... Continue Reading →
ஊசி முனையில் உஷா..! – Crime Novel
இந்த முறை ஆபிசிற்கே வந்து காதலை சொன்ன விஜயகுமாரை எரித்து விடுவது போல் உஷ்ணமாகப் பார்த்தாள் உஷா. ஆனால், அவன் விடுவதாக இல்லை. திடீர் விஜயமாக அன்று மாலையே குடும்பத்துடன் உஷாவைப் பெண் பார்க்க வீட்டிற்கே வந்துவிட்ட விஜயகுமாருக்கு ஒரு அதிர்ச்சி. திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென ஒரு விபத்தில் உயிரிழந்த காதலன் குணாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக எண்ணி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வறுமையில் இருந்த குணாவின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள் உஷா. உஷா... Continue Reading →
இன்னொரு அத்தியாயம் – Crime Novel
போனில் வந்த செய்தியைக் கேட்டதிலிருந்து நொறுங்கிப் போயிருந்தாள் சாந்தா. இதோடு இரண்டாவது முறையாக அவளுடைய அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வர அயர்ந்து போனாள். கணவனின் ஆபிசிற்கு போன் செய்து தகவலைத் தெரிவித்துவிட்டு, அவளுடைய ஆபிசில் லீவ் சொல்லிவிட்டு உடனே மருத்துவமனைக்குக் கிளம்பினாள். ஹாஸ்பிடலில் அவளுக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருந்தது. தன்னுடைய தந்தைக்கு உடனே பைபாஸ் சர்ஜரி செய்ய லட்ச ரூபாய் செலவாகும் என டாக்டர் சொல்ல இடிந்து போனாள் சாந்தா. மாலையில் சாவதானமாக மாமனாரைப் பார்க்க... Continue Reading →
யானை டாக்டர்
ஜன சந்தடி - இரைச்சல் - புகை - கண்கூசும் கண்ணாடி கட்டிடங்கள். உங்கள் பரபரப்பான நேரங்களின் போது தேநீர் இடைவெளியில் வாசிக்கும் நாளிதழில் ஏதோ ஒரு மூலையில் யானைகளைப் பற்றிய செய்திகளைப் படித்ததுண்டா..? கோவில் யானைகளைப் பற்றியோ, கும்கி யானைகளைப் பற்றியோ அல்ல. தென்னிந்திய அடர்வனங்களில் வாழும் காட்டு யானைகளைப் பற்றி என்றாவது படித்தது உண்டா..? சில நிமிடங்கள் தனிமையை உணர முயற்சியுங்கள்...அடுத்து வாசிக்கும் முன்... இயற்கைக்கே உரித்தான வாசனையும்..அழகிய சலனங்களால் ஆன நிசப்தமும்..சூரியனில் மிளிரும்... Continue Reading →
சிவப்பு விளக்கு எரிகிறது..!!
புத்தகத்தோட தலைப்பைப் படிச்ச உடனே இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்று வாசகர்களில் நிறைய பேர் இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆம்..இந்தப் புத்தகம் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழும் பெண்களைப் பற்றியது தான். அதுவும் வேறு வழியின்றி இந்த இழிதொழிலுக்குத் தள்ளப்பட்ட அபலைப் பெண்களைப் பற்றியது தான். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், வேலை பார்க்கும் இடத்தில் காதல் வலையில் விழுந்த பெண்கள், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதை விடுதிகளில் இருக்கும் பெண்கள்,... Continue Reading →